Ajithan
Born
in Dharmapuri, India
February 28, 1993
Twitter
Genre
Influences
![]() |
மைத்ரி [Maitri]
by
2 editions
—
published
2022
—
|
|
![]() |
அல் கிஸா [Al Kisa]
by
—
published
2023
|
|
![]() |
மருபூமி [Maruboomi]
by
—
published
2023
|
|
* Note: these are all the books on Goodreads for this author. To add more, click here.
“எங்கிருந்து வருகிறாய் நல்லவனே? எங்கே செல்கிறாய்?” முதல்முறையாக அக்கேள்வி எனக்கு முற்றிலும் பொருளற்றதாக ஒலித்தது. எங்கு செல்கிறேனோ அங்கு, எங்கிருந்து வந்தேனோ அங்கிருந்து, அதற்கு மேல் என்ன கூறிவிட முடியும்?”
― மருபூமி [Maruboomi]
― மருபூமி [Maruboomi]
“இன்னும் எவ்வளவு தூரம்? நான் எண்ணுவதை விட்டுவிட்டேன். மாறாத அந்த தாளம் மட்டுமே நெஞ்சில் அதிர்ந்தது. ஏற்றமும் இறக்கமும், இரவும் பகலும். தூரம் அல்ல அது, காலம். மனிதர்களாக நாம் கடப்பதெல்லாம் அது ஒன்றே. ஓடியும் நீந்தியும் சந்ததிகளை பெற்று பெருகியும் அசையாமல் தியானத்தில் அமர்ந்தும். என் முன்னே காலமே வெளியாகி விரிந்திருந்தது. எங்கு திரும்பினாலும் திசை ஒன்றே, பின்னால் ஒருபோதும் திரும்பமுடியாத கடந்த காலம். இறந்த காலம், பூத காலம். நிரந்தரமாக அது முன்னால் செலுத்தியது. என் முன்னால் தொலைவில் தெரிந்தது அன்றைய பிற்பகல், மேலும் நெடுந்தொலைவில், சூரியனின் காலடியில் கிடந்தது அந்தி. இனி வரப்போகும் ஆயிரமாயிரம் யுகங்களுமெல்லாம் அதன் பின்னே. எங்கோ என் மரணம். எண்திசையிலிருந்தும் அருகி வரும் ஒரு வட்டம். ஒருவேளை அசையாமல் நான் இங்கு நின்றுவிட்டால் காலமும் உறைந்து நின்றுவிடுமா?”
― மருபூமி [Maruboomi]
― மருபூமி [Maruboomi]
“கள்ளிச்செடிகள் இடை உயரத்திற்கு வளர்ந்து நின்றன. ஒவ்வொன்றும் கொண்டையில் நீல நிற பூக்களை சூடியிருந்தன. முட்களால் காற்றைக்கீறி அவை இசைத்தன. ஏதோ தேவர்களின் சங்கீதம். கைம்பெண்ணின் ரகசிய முணுமுணுப்பு. என் உடல் சிலிர்த்தது. எங்கும் நீலம், நீலத்தின் எண்ணில்லா வண்ண பேதங்களில் அவை பூத்திருந்தன. மை நீலத்தில் துவங்கி வான் நீலம் வரை. அவற்றிலிருந்து மிக மெல்லிய வாசம். பாலை என் புலன்களை அதிகூர்மையாக்கியிருந்தது. ஏகாந்தத்தில் சுகந்தம் பரப்பி காத்துநின்றன அம்மலர்கள். யாருக்காக?”
― மருபூமி [Maruboomi]
― மருபூமி [Maruboomi]
Is this you? Let us know. If not, help out and invite Ajithan to Goodreads.