ரமேஷ் பிரேதன் ஒரு தமிழ் எழுத்தாளர். இருபது ஆண்டுகளாக கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் எழுதியுள்ளார். பின்நவீனத்துவ படைப்பிலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் அறியப்படுகிறார். பாண்டிச்சேரி அரசின் ”கம்பன் புகழ் விருது” இரண்டு முறை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது முழு நேர எழுத்தாளராக பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.