மெல்லத் தழுவிடும் சாளரத் தென்றல்
இறுக்கி அணைத்துக் கொள்ளும் தனிமை
விரவிக் கிடக்கும் புத்தகங்கள்
விரல் ஒதுக்கும் ஓரக்குழல்
நிறைந்த அமைதி
மோகித்த கனவுகள்
புரண்டு படுக்கும் உடல்
சாளரத்தின் வெளியே ஒயிலாய் ஆடும் கிளை
இலைகள் காதலில் திளைத்து
இன்னும் சிவக்கின்றன
பச்சைக்குள் நெளியும் நரம்புகள்
மிச்சமாய் ஒரு பரிசு
அவன் அணைக்காமல் விட்டுச்சென்ற
சிகரெட் புகை
அறையையும் கடந்தது
- வெண்பா கீதாயன்
Published on June 27, 2024 14:12