வைகறைத் தூறல் நிலம் நனைக்க
உதிர்ந்து மிளிரும் பவழமல்லிகள்
விண்ணுலகிலும் அலருமென
கந்தர்வன் அளித்ததன் கொடையவை
ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு மலர்விலும்
கந்தர்வ வருகையை நோக்கி இருக்கும்
துவள்விழியைத் திறந்திடுமின்!
பொற்சிகழி பூட்டும் மென்பாவாய்!
Published on December 18, 2024 12:24