பாவை மொழிகள் (4 - 6)

அரவம் துயிலும் பொருட்டு

மெதுவாய் அகழ்வில் ஊர

ஊரின் அரவம் கேண்மின் மடந்தாய்!

மாமைபடர் பிச்சி உச்சுகொட்டி வீழ்ந்திட

சூடாமலர்களின் தாபத்தைத் தணித்திட

அள்ளி அவன் அடியிட வேண்டாமோ?

கிள்ளிடும் பொன்பாவாய்!

//

அவன் தீண்டலுக்கு அடம்கொள்ளும்

மடித்து வைத்த இழைப்பட்டு

கசக்கியும் சுழற்றியும் சழக்காடிக்

கழற்றி எறிவானெனும் மதியின்றி

களவைத் தூண்டும் மடப்பட்டு

முந்தைய கூடலை நினைவுருத்தி

வருத்திடும் அணியிழையாய்!

//

புலரொளியில் நிலம்படர் ஈரம்

அவன் உள்ளங்கை மணம்

அந்த நாகலிங்கப் பூக்கள்

கண்டுகொள்ள எவருமற்ற மரத்தடி

ஒற்றை பூவின் மணத்தை

மந்தணமாய் மெல்ல

கள்ளமாய் நகைத்திடும் மார்கழி

உள்ளத்தைக் கொள்ளாய் மென்பாவாய்

//

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2025 13:10
No comments have been added yet.


Venba Geethayan's Blog

Venba Geethayan
Venba Geethayan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Venba Geethayan's blog with rss.