சிந்துவெளியும் சங்க காலமும்!

ஆரியர்கள் வந்த பிறகேஇந்திய நிலப்பரப்பு நாகரீகம் அடைந்ததாகவும் அதற்கு முன், இங்கே இருந்த மக்கள் காட்டுமிராண்டிகளாய்இருந்தது போலவும் கட்டுக்கதைகளை வரலாறென இங்கு காலம் காலமாக சொல்லப்பட்டுக் கொண்டேஇருக்கிறது.
வேதங்களே இந்தியநாகரீகத்தின் மூலங்களாகவும், வேத காலமே இந்திய வரலாற்றின் துவக்கமாகவும், ரிஷிகளின்வாயசைவில் காலமே அசைந்ததாகவும் இங்கு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. பூமியில் இதுவரைகாண முடியாத சரஸ்வதி நதியை கற்பனையில் பெருக்கெடுக்கச் செய்து நம்ப வைக்கிறார்கள்.இதிகாசங்களும், அதன் கற்பனை பாத்திரங்களையும் இங்கு தெய்வீக மயமாக்கி வைத்திருக்கிறார்கள்.
உண்மைகள் மண்மூடிப்போவதில்லை.
அகழ்வராய்ச்சிகள்வரலாற்றுப் பொய்களையும், புரட்டுகளையும் அம்பலப்படுத்தி ஆதாரங்களை பூமிக்குள்ளிருந்துவெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. வேத காலத்துக்கும் 1500 ஆண்டுகள் முந்தைய சிந்துவெளிநாகரீகம் வெளிப்பட்டு கடந்த காலத்தின் மீது வெளிச்சக் கீற்றுகளை வீசியிருக்கிறது.
4500 ஆண்டுகளுக்குமுந்தைய நாகரீகம் அது. ஒரே அளவிலான செங்கற்கள், தரக் கட்டுப்பாடுகள் கொண்ட வணிகத்தைச்சொல்லும் ஒரே அளவுள்ள எடைக்கற்கள், தாய் தெய்வவழிபாடுகள், முத்திரைகளில் காணப்படும் எழுத்துக்கள் என முதிர்ச்சியடைந்த நகர நாகரீகம்அது.
அந்த நாகரீகம் எப்படிசிதைந்தது, அந்த மக்கள் என்ன ஆனார்கள், அவர்கள் பேசிய மொழி என்ன போன்ற கேள்விகள் எல்லாம்நூறு ஆண்டுகளாய் முழுமையான விடையில்லாமல் இருக்கிறது.
தேதிகள் அற்ற அந்தகடந்தகாலம் குறித்து அதற்குப் பின் வந்த வேதங்களில் பேச்சு மூச்சே இல்லை. ஆனால் அதுகுறித்த தடயங்கள் சங்கப் பாடல்களில் சிந்துவெளியின் நாடியை அறிய முடிகிறது.
வழிவழியாய் வந்தநம் தொன்மங்களின் உடல்மொழியில், அதாவது பண்பாட்டில் சிந்துவெளி நாகரீகம் தென்படுகிறது.தென்னிந்திய நிலப்பரப்புக்கும், சிந்துவெளிக்கும் இருக்கும் தொடர்புகள் புலப்படுகிறது.கீழடியும், ஆதிச்ச நல்லூரும், சங்கப் பாடல்களும் அவைகளை உறுதி செய்கின்றன.
நம் கடந்த காலம்பற்றிய அந்த குறிப்புகளை இன்றைய டிஜிட்டல் வடிவில் சொல்லத் தோன்றியது. மதிப்பிற்குரியஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களின் ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ நூலை அடிப்படையாகக் கொண்டு,எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் வழிகாட்டுதலோடு யூடியுபில் Short-களாக வெளியிட்டு வருகிறேன்.
இதுவரை 8 shortsவெளியாகி இருக்கின்றன.
ஆர்வமுள்ளவர்கள்பார்க்கலாம்!