பூமணியின் வெக்கை
சில படைப்புகளை வாசித்ததும் அவற்றைப் பற்றிய மனவோட்டங்களை அவ்வப்போதே பதிந்துவிடுவது வழக்கம். அக்குறிப்புகளை பின்னால் என்றாவது எடுத்துத் திரும்ப வாசித்திருக்கிறேனா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இருந்தாலும் அப்படி எழுதுவது பிடித்திருக்கிறது.அதே நேரத்தில் சில படைப்புகளை அப்படி வாசித்ததும் அவற்றைப் பற்றி உடனுக்குடன் எழுதிக் கடந்து விட முடியாது. மண்ணுள் ஓடும் நதிபோல மனதுள் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படியான படைப்புகளில் ஒன்று பூமணியின் வெக்கை. அப்புறம் ஏன் இப்போது என்றால், நண்பர் சங்கர் அதைப் பற்றிய பதிவொன்றை இன்று போட்டு கிளறிவிட்டார்.அண்ணனின் கொலைக்கு பழிவாங்கும் தம்பியின் கதையை அம்மண்ணின், மக்களின் இயல்புகளை, வாழ்க்கை முறையை, வர்க்க பேதங்களை, சந்திக்கும் பிரச்சனைகளை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் மீது திணிக்கப்படும் அரசியலை பின்னிப் பின்னி நாவலை எழுதியிருக்கிறார். இத்தனை இருந்தும் எந்த ஓர் இடத்திலும் பிரச்சார நெடித் தெறிக்காமல் எழுதப்பட்டிருப்பதே இந்நாவலை உயர்ந்ததோர் கலைப்படைப்பாக ஆக்குகிறது.கதைக்களம் எங்களூர்ப்பக்கம் என்பதாலோ என்னவோ மனதுக்கு இன்னும் நெருக்கமாக உணர முடிந்தது. குறிப்பாக நாவல் நெடுக தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களும் அதில் வெளிப்படும் அவர்களுக்கிடையேயான உள்ளன்பும் தனித்துவமானது. அதுவே மறு வாசிப்பைக் கோருகிறது


Published on July 10, 2018 08:58
No comments have been added yet.
Karthik Balasubramanian's Blog
- Karthik Balasubramanian's profile
- 12 followers
Karthik Balasubramanian isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
