டொரினா பற்றி சுரேஷ் வெங்கடாத்ரி
எந்தக் கதையுமே மோசம் என்று சொல்ல முடியவில்லை..எளிய நேரடியான கதைகள். ஆனால், விஷய கனம்,ஒரு அழுத்தம் குறைவு என்று எனக்குத் தோன்றுகிறது.மிக எளிய பிரச்னைகளை பேசுகின்றனவோ என்றும்.(எளிது எது அழுத்தமானவை எது எது என்பதே ஒரு விவாதம்தான்) இரு கோப்பைகள், பார்வை,விசுவாசம் ஆகியவை ஒப்புநோக்க கனமாக இருக்கின்றன.மொழி, நடை ஓகே.அனாவசியமான, கவித்துவம் எல்லாம் ஏதுமின்றி, இயல்பாக இருக்கின்றது. சில தேய்வழக்குகளை தவிர்க்கலாம். சில அவதானிப்புகள் இன்னமும் கூர்மையாக இருக்கலாம்.சிலவற்றை தெரிந்துதான் பிரயோகிக்கிறாரா என்ற சந்தேகமும் வருகிறது உதாரணமாக,"செம்மண் தரையில் சிந்திய நீர் போல பசி வயிற்றில் பரவியது" ஏப்ரல் வந்துவிட்டால் அக்கினி நட்சத்திரம் வந்துவிடும் போன்ற பிரயோகங்கள். சிறந்த எழுத்தாளர்களுக்கு அவர்கள் புனைவுகளில் கொண்டுவரும், புற சூழல் பற்றிய சரியான கூர்மையான, அவதானிப்புகள் மிக முக்கியமானவை. அவைதான் அவர் சொல்லும் விஷயம், சூழல் குறித்து அவர் நன்றாக அறிந்திருக்கிறார் என்பதை வாசகனுக்கு அறிவித்து, கதைக்கு ஒரு நம்பகத் தன்மையை அளிக்கும். இதில் கூடுதல் கவனம் செலுத்தலாம். இந்தத் தொகுப்பில் உள்ள லிண்டா தாமஸ் எனும் கதை, ஜனவரி மாத காலச் சுவடு இதழில் வெளிவந்த இவரது மேய்ப்பனின் கருணை கதைக்கு ஒரு முன்னோட்டம் போல இப்போது படிக்கையில் (அதை முன்னரே படித்ததனால்) தோன்றுகிறது.இன்னும் சிறந்த ஆக்கங்களை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை இந்தத் தொகுப்பு அறிவிக்கிறது. இதையே தன் அழகான முன்னுரையில் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் சொல்லியிருக்கிறார்.ஒரு சந்தேகம் அது டொரி'னோவா' டொரி'னாவா'? எங்க ஊர்ப் பக்கமெல்லாம், டொரினோ என்றே சொன்னது போல நினைவு. அன்றைய ஜனதா அரசு, கொக்கோகோலா ,ஃ பாண்டா ஆகியவற்றை தடை செய்த பின்னர் இதுவும், டபுள் செவனும் அவற்றுக்கு மாற்றாக வந்த உள்ளூர் தயாரிப்புகள்.நீண்ட நாட்களுக்குப்பறம் அதை நினைவுக்கு கொண்டுவந்தது பற்றி மகிழ்ச்சியே .

Published on July 10, 2018 08:54
No comments have been added yet.
Karthik Balasubramanian's Blog
- Karthik Balasubramanian's profile
- 12 followers
Karthik Balasubramanian isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
