AshokMy Thoughts https://samratashok.wordpress.com/நிழ...

 

Ashok

My Thoughts

https://samratashok.wordpress.com/

நிழலின் தனிமை  

நிழலின் தனிமை

தேவிபாரதியின் நிழலின் தனிமை பழியை சொல்லும் கதை. நவீனத்துவ நாவல்களின் அம்சம் கொண்ட இது தனி மனிதனின் அகத்தை பேசும் நாவல்.
நாவலின் கதை சொல்லி தன சிறுவயது காலத்தில் தன அக்காவை பாலியல் பலாத்காரம் செய்த கருணாகரன் என்றும் இன்றைய பெரும் பிரமுகரை சந்தித்ததில் இருந்து கதையை தொடங்குகிறார். கதை சொல்லி ஒரு கிராமத்து பள்ளியில் கிளார்க்காக பணிக்கு சேருகிறான். அந்த ஊரின் பெரும் பிரமுகர் இன்றைய கருணாகரன். அன்றைய கந்து வட்டிக்காரனான கருணாகரன் இன்று ஒரு கொடை வள்ளல். பலருக்கும் பல உதவிகளை செய்யும் வள்ளல்.

அந்த சம்பவத்தின் வடுக்கள் கதை சொல்லியின் ஆழ் மனதில் பதிந்த ஒன்று, அந்த சம்பவத்தால் அவர்கள் குடும்பம் அந்த ஊரை விட்டு வெளியேறிவிடுகிறது . 30 ஆண்டுகளுக்குபிறகு கருணாகரனை பார்தத்தை தன் அக்காவிடம் சொல்கிறான்.
அக்கா அவனை கொன்று பழிதீர்க்கும் படி அவனிடம் கூறுகிறாள். கருணாகரனை ஒன்னும் செய்ய முடியாத நிலையில் ஒரு கிளார்க்காக வேலை செய்யும் கதை சொல்லி. ஒரு கட்டத்தில் அவன் கருணாகரனுக்கு மிகவும் நெருக்க மாணவனாக ஆகிறான். அத் துடன் அவன் மகளுக்கும். கருணாகரனின் மகள் அவன் மேல் காதல் வயப் படுகிறாள். இவனால் அவள் காதலை மறுக்க முடியவில்லை, ஒரு ஆற்றாமையின் இரவில் அவன் தன் வஞ்சத்தாலும் வெறுப்பாலும் அவலுடன் உணர்வு கொள்கிறான். கருணாகரனை ஒன்னும் செய்ய முடியாத தன்னுடைய கோழை தனைத்தை இதை கொண்டு ஈடு செய்து கொள்கிறான். தன் வஞ்சத்தின் பழியை கருணாகரனின் மகளிடம் வெளிப்படுத்தும் விதத்தில் அவன் முதல் வீழ்ச்சி தொடங்குகிறது. சிறுமியை போல அவன் மேல் காதல் கொள்ளும் அவள் அவனின் நிஜ முகம் கண்டு மனம் உடைந்த போகிறாள். அவள் கதைசொல்லியின் கீழ்மை கண்டு கொள்ளும் இடத்தில் சொல்லும் வரிகள் ‘நீயும் மற்றவர்களை போலத்தானே தாங்க்ஸ் பா’.

ஒரு புறம் கருணாகரனின் வாழ்க்கை ஒரு சம்பவத்தால் முற்றிலுமாக மாறி விடுகிறது. கதை சொல்லி எதுவும் செய்யாமலே கருணாகரனின் குடும்பம் சீர் அழிந்து பொய் விடுகிறது. அள்ளல் பட்டு ஆறாத கண்ணீர் அவன் குடும்பத்தை அவன் செல்வத்தை அழிக்கிறது. மறுபுறம் கதை சொல்லியின் அகம் படிப்படியாய் நஞ்சு நிறைந்த ஒன்றாய் உருமாறிவிடுகிறது.

கருணாகரனின் மகள் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள்.
கதை சொல்லியால் எதுவும் செய்ய முடியவில்லை, அவன் தன்னுடைய பிறப்பு சூழலால் மிகவும் தாழ்மை உணர்வு கொண்டவனாக உணர்கிறான். தன் சூழலில்
நிகழும் அணைத்து சம்பவங்களையும் அவனால் எதையும் செய்ய முடியாதவனாய் ஒரு கையறு நிலையை உணர்கிறான்.
நாவலின் முடிவில் கதை சொல்லி ஒருவிதத்தில் கருணாகரனை போல் மாறி உள்ளான். அவன் சகோதரி மரண தருவாயில் இருக்கும் கருணாகரனை பார்த்து விட்டு அவள் இவன் வேறு ஒருவன் என்று சொல்கிறாள். கதை சொல்லியின் வாழ்க்கை முற்றிலும் பொருள் இழந்த இடத்தில் முடிகிறது.

இந்நாவளை வாசிக்கும் தோறும் நமக்கும் தோன்றும் கேள்வி தீமைக்கு எதிராக நாம் செய்ய கூடியது தான் என்ன. இந்நாவலின் கதை சொல்லி கொள்ளும் வீழ்ச்சி நமக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுக்கிறது. ஏனென்றால் அவன் தொடங்கும் விதம் என்னவோ ஒரு பழி தீர்க்கும் இடத்தில் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பழி பின் சென்று, அவன் தீய்மையில் திளைக்க செயகிறான்.பல நூறு பாவனைகள் மூலமாக தன்னை முடிவில்லாமல் நியாய படுத்தி கொள்கிறான்.

அவனால் எச்செயலையும் துளியும் குற்ற உணர்வு கொள்ளாமல் செய்ய முடிகிறது. அதன் தொடக்கமாக இருந்த இடம் அவன் அக்கா பாலியல் வன்முறை நிகழ்ந்த  அன்று அவன் அதை தன நண்பனிடம் விவரிக்கிறான். அதை கேட்ட அந்த நண்பன் தனிமையில் சுய-மைதுனம் செய்து கொள்கிறான். கதை சொல்லி ஏன் இதை இந்த நண்பனிடம் சொல்கிறான். ஆணின் காமம் கொள்ளும் கீழ்மைக்கு எல்லையே இல்லை.
பிறகு கருணாகரனின் மகளின் புணரும் தருணத்தில் அவளுடைய முலைகளை பற்றி அவளை துன்புறுத்துகிறான். அவன் அக்காவின் குருதி படிந்த முலைகள் அவன் நினைவுக்கு வருகிறது. ஏதோ ஒரு விதத்தில் அவன் அகத்தின் ஆழம் கருணாகரனை உரு மாறி நடித்து கொள்கிறது. அவன் கீழ்மையில் கொள்ளும் நிறைவு இதனால் போலத் தான். ஒரு சில நேரங்களின் தீய்மையே ஒரு தனி இருப்பாக அவன் வாழ்வை இட்டு செல்கிறது. மனிதனின் ஆழத்தின் சில கதவுகளை அவன் தெரியாமலும் திறந்து கொள்ள கூடாது. அதை கடந்தவன் எதையும் செய்யு கூடியவனாகிறான்.

Posted onJanuary 15, 2019CategoriesBooksLeave a commenton நிழலின் தனிமை 

 

நிழலின் தனிமை  

நிழலின் தனிமை

தேவிபாரதியின் நிழலின் தனிமை பழியை சொல்லும் கதை. நவீனத்துவ நாவல்களின் அம்சம் கொண்ட இது தனி மனிதனின் அகத்தை பேசும் நாவல்.
நாவலின் கதை சொல்லி தன சிறுவயது காலத்தில் தன அக்காவை பாலியல் பலாத்காரம் செய்த கருணாகரன் என்றும் இன்றைய பெரும் பிரமுகரை சந்தித்ததில் இருந்து கதையை தொடங்குகிறார். கதை சொல்லி ஒரு கிராமத்து பள்ளியில் கிளார்க்காக பணிக்கு சேருகிறான். அந்த ஊரின் பெரும் பிரமுகர் இன்றைய கருணாகரன். அன்றைய கந்து வட்டிக்காரனான கருணாகரன் இன்று ஒரு கொடை வள்ளல். பலருக்கும் பல உதவிகளை செய்யும் வள்ளல்.

அந்த சம்பவத்தின் வடுக்கள் கதை சொல்லியின் ஆழ் மனதில் பதிந்த ஒன்று, அந்த சம்பவத்தால் அவர்கள் குடும்பம் அந்த ஊரை விட்டு வெளியேறிவிடுகிறது . 30 ஆண்டுகளுக்குபிறகு கருணாகரனை பார்தத்தை தன் அக்காவிடம் சொல்கிறான்.
அக்கா அவனை கொன்று பழிதீர்க்கும் படி அவனிடம் கூறுகிறாள். கருணாகரனை ஒன்னும் செய்ய முடியாத நிலையில் ஒரு கிளார்க்காக வேலை செய்யும் கதை சொல்லி. ஒரு கட்டத்தில் அவன் கருணாகரனுக்கு மிகவும் நெருக்க மாணவனாக ஆகிறான். அத் துடன் அவன் மகளுக்கும். கருணாகரனின் மகள் அவன் மேல் காதல் வயப் படுகிறாள். இவனால் அவள் காதலை மறுக்க முடியவில்லை, ஒரு ஆற்றாமையின் இரவில் அவன் தன் வஞ்சத்தாலும் வெறுப்பாலும் அவலுடன் உணர்வு கொள்கிறான். கருணாகரனை ஒன்னும் செய்ய முடியாத தன்னுடைய கோழை தனைத்தை இதை கொண்டு ஈடு செய்து கொள்கிறான். தன் வஞ்சத்தின் பழியை கருணாகரனின் மகளிடம் வெளிப்படுத்தும் விதத்தில் அவன் முதல் வீழ்ச்சி தொடங்குகிறது. சிறுமியை போல அவன் மேல் காதல் கொள்ளும் அவள் அவனின் நிஜ முகம் கண்டு மனம் உடைந்த போகிறாள். அவள் கதைசொல்லியின் கீழ்மை கண்டு கொள்ளும் இடத்தில் சொல்லும் வரிகள் ‘நீயும் மற்றவர்களை போலத்தானே தாங்க்ஸ் பா’.

ஒரு புறம் கருணாகரனின் வாழ்க்கை ஒரு சம்பவத்தால் முற்றிலுமாக மாறி விடுகிறது. கதை சொல்லி எதுவும் செய்யாமலே கருணாகரனின் குடும்பம் சீர் அழிந்து பொய் விடுகிறது. அள்ளல் பட்டு ஆறாத கண்ணீர் அவன் குடும்பத்தை அவன் செல்வத்தை அழிக்கிறது. மறுபுறம் கதை சொல்லியின் அகம் படிப்படியாய் நஞ்சு நிறைந்த ஒன்றாய் உருமாறிவிடுகிறது.

கருணாகரனின் மகள் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள்.
கதை சொல்லியால் எதுவும் செய்ய முடியவில்லை, அவன் தன்னுடைய பிறப்பு சூழலால் மிகவும் தாழ்மை உணர்வு கொண்டவனாக உணர்கிறான். தன் சூழலில்
நிகழும் அணைத்து சம்பவங்களையும் அவனால் எதையும் செய்ய முடியாதவனாய் ஒரு கையறு நிலையை உணர்கிறான்.
நாவலின் முடிவில் கதை சொல்லி ஒருவிதத்தில் கருணாகரனை போல் மாறி உள்ளான். அவன் சகோதரி மரண தருவாயில் இருக்கும் கருணாகரனை பார்த்து விட்டு அவள் இவன் வேறு ஒருவன் என்று சொல்கிறாள். கதை சொல்லியின் வாழ்க்கை முற்றிலும் பொருள் இழந்த இடத்தில் முடிகிறது.

இந்நாவளை வாசிக்கும் தோறும் நமக்கும் தோன்றும் கேள்வி தீமைக்கு எதிராக நாம் செய்ய கூடியது தான் என்ன. இந்நாவலின் கதை சொல்லி கொள்ளும் வீழ்ச்சி நமக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுக்கிறது. ஏனென்றால் அவன் தொடங்கும் விதம் என்னவோ ஒரு பழி தீர்க்கும் இடத்தில் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பழி பின் சென்று, அவன் தீய்மையில் திளைக்க செயகிறான்.பல நூறு பாவனைகள் மூலமாக தன்னை முடிவில்லாமல் நியாய படுத்தி கொள்கிறான்.

அவனால் எச்செயலையும் துளியும் குற்ற உணர்வு கொள்ளாமல் செய்ய முடிகிறது. அதன் தொடக்கமாக இருந்த இடம் அவன் அக்கா பாலியல் வன்முறை நிகழ்ந்த  அன்று அவன் அதை தன நண்பனிடம் விவரிக்கிறான். அதை கேட்ட அந்த நண்பன் தனிமையில் சுய-மைதுனம் செய்து கொள்கிறான். கதை சொல்லி ஏன் இதை இந்த நண்பனிடம் சொல்கிறான். ஆணின் காமம் கொள்ளும் கீழ்மைக்கு எல்லையே இல்லை.
பிறகு கருணாகரனின் மகளின் புணரும் தருணத்தில் அவளுடைய முலைகளை பற்றி அவளை துன்புறுத்துகிறான். அவன் அக்காவின் குருதி படிந்த முலைகள் அவன் நினைவுக்கு வருகிறது. ஏதோ ஒரு விதத்தில் அவன் அகத்தின் ஆழம் கருணாகரனை உரு மாறி நடித்து கொள்கிறது. அவன் கீழ்மையில் கொள்ளும் நிறைவு இதனால் போலத் தான். ஒரு சில நேரங்களின் தீய்மையே ஒரு தனி இருப்பாக அவன் வாழ்வை இட்டு செல்கிறது. மனிதனின் ஆழத்தின் சில கதவுகளை அவன் தெரியாமலும் திறந்து கொள்ள கூடாது. அதை கடந்தவன் எதையும் செய்யு கூடியவனாகிறான்.

Posted onJanuary 15, 2019CategoriesBooksLeave a commenton நிழலின் தனிமை 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2022 09:01
No comments have been added yet.


Devibharathi's Blog

Devibharathi
Devibharathi isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Devibharathi's blog with rss.