பெருங்களிறு [குறுநாவல்] - 1
பாகம் 1: தலை
மலைப் பாறையில் படர்ந்து பரவும் அருவியாய் இரவு மீது இருள் தழுவிக் கிடந்தது. யாகத்தின் மந்திர உச்சாடனம் போல் ராப்பூச்சிகள் சதா உளறிக் கொண்டிருந்தன.
ரத்த நந்தகாவின் பரந்த முதுகின் மீது ஏறி அமர்ந்த போது தம்மாவுக்குக் கால்களின் சங்கமத்தில் குறுகுறுவென ஓர் உணர்வு ஓடியது. முதலில் அந்த வெண்யானையின் ரோமக் கம்பிகள் தன் அந்தரங்கத்தில் குத்துவதாகத் தோன்றி, இடுப்பாடை அள்ளிச் செருகித் தடுப்பு செய்தாள். அப்போதும் அந்த வினோதக் குறுகுறுப்பு நீங்கவில்லை.
எனில் அது இல்லை. வேறு என்ன? யோசித்துக் கொண்டிருக்கும் போதே அடிவயிறு வலிக்க ஆரம்பித்தது. கண்களை இறுக மூடி வலி தாங்கிய சில கணங்களில் குருதி கசியப் பூப்படைந்தாள். அஃது புரிந்தோ புரியாமலோ வெள்ளைக் களிறு பிளிறியது!
அந்த வாலைக் குமரியின் அறியாமையை, ஆர்வத்தை புது வனப்பும் மிகு வெட்கமும் ஆட்கொண்டன. அவளுக்குப் பின் அமர்ந்து, ஒரு கையில் அங்குசத்துடன் மறுகரத்தை அவளது வறிய இடையைச் சுற்றித் தயக்கமாகப் போட்டிருந்த மின்சாவைச் சட்டெனத் தள்ளி விட்டு யானையின் முதுகிலிருந்து சரிந்திறங்கி குடில் நோக்கி ஓடினாள் தம்மா.
மின்சா புரியாமல் விழித்தான். ஏன் இவள் இப்படித் திடீரெனப் பரபரத்து ஓடுகிறாள்? அவளாகத்தானே ரத்த நந்தகா என்கிற அந்த வெண்வாரணம் மீதேறிச் சவாரி போக வேண்டும் என இந்தப் பின்னிரவில் ரகசியமாகத் தன்னை இங்கே அழைத்து வந்தாள்!
தம்மா இறங்கியதும் ஆர்வம் தீர்ந்தது என்பது போல் ரத்த நந்தகா தன் பிரம்மாண்ட உடலை மெல்லச் சிலிர்த்தது. மின்சா தடுமாறி, அவசரமாகக் கீழே சறுக்கினான். ஒரு ராட்சசப் பட்சி இறகை உதிர்ப்பது போலிருந்தது அக்காட்சி. மின்சா எரிச்சலுற்றாலும் அதன் செயல் ஆச்சரியமளிக்கவில்லை. அது வந்த நாளிலிருந்து அப்படி முரடாகத்தான் இருக்கிறது. மாறாக, அவனுக்கு வியப்பளித்தது சற்று முன் அவனும் தம்மாவும் வந்து அதன் அருகே நின்ற போது இருவரும் அதன் மேலேறச் சாதுவாக ஒத்துழைத்ததுதான்.
விழுந்ததில் நேர்ந்த முழங்கால்ச் சிராய்ப்பைப் பொருட்படுத்தாமல் மின்சாவும் அவள் பின்னே ஓடினான். கடந்த மூன்று மாதங்களாக அவன் அவள் பின்னால் அப்படி ஓடிக் கொண்டுதான் இருக்கிறான். காதலா என்று கேட்டால் அப்படியும் சொல்ல முடியாது.
அவள் இன்னும் வயதுக்குக் கூட வரவில்லை. அவளைக் காதலிப்பதாகச் சொன்னால் அந்தக் கிராமம் ஒன்று கூடி, தலை குனிந்து நிற்கும் அவனைச் சூழ்ந்து நின்று, நெடிய அறிவுரைகள் சொல்லும். அவனுக்கு மட்டும் என்ன, அவளை விட ஐந்து வயது அதிகம். இப்போதுதான் மீசையே முளைக்கிறது. அதனால் என்ன? மணம் செய்வதற்குத்தான் வயதுக் கட்டுப்பாடு எல்லாம், காதலுக்கு எதற்கு என்று தோன்றியது. தவிர, தம்மாவும் இன்றோ நாளையோ ருதுவாகாமலா போய் விடுவாள்! பெருமூச்சு விட்டான் மின்சா.
தம்மா குடிலுக்குள் ஓடிப் போய் விட்டாள். குடிலில் விளக்கு தூண்டப்பட்டது தெரிந்தது. அவளது அக்காள் சந்தாவை எழுப்பி இருக்கிறாள். ஏன்? புரியவில்லை. திருட்டுத்தனமாக வந்தவள் திடீரெனப் பயந்து போய்த் திரும்பி விட்டாள் என்று வைத்துக் கொண்டாலும் உறங்கிக் கிடந்த சகோதரியை ஏன் அகால வேளையில் எழுப்ப வேண்டும்? எப்படியும் தன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாள் என்றே தோன்றியது மின்சாவுக்கு. அப்படிச் செய்தால் அவளும் மாட்டிக் கொள்வாள் என்பது ஒரு புறம். தம்மாவின் தங்கம் நிகர்த்த குணம் அப்படிப்பட்டது என்ற புரிதல் இன்னொரு பக்கம். அதுவே அவனை ஈர்த்தது.
இதற்கு மேல் அங்கே அவன் நின்று கொண்டிருப்பது நல்லதல்ல. நரது மட்டும் பார்த்து விட்டால் அவனைக் கொல்லவும் தயங்க மாட்டான். அவசரமாக மறுபடி ரத்த நந்தகா இருந்த இடத்துக்குத் திரும்பி வந்தான். அதை மெல்ல நடத்தி கொட்டடிக்கு அழைத்து வந்து அடைத்தான். அதன் பக்க வாட்டில் அவனுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் படுத்துக் கொண்டான். அதைப் படுக்கை என்று உளமாறச் சொல்ல முடியாது. உலர் வைக்கோல் திணிவாலான அடுக்கு. கண் செருகும் வரை தம்மா பற்றி எண்ணிக் கொண்டிருந்தான்.
பிடித்த பெண்ணை நினைத்துக் கொள்வதை விட ஒரு போதை கண்டறியப்படவில்லை.
*
புத்தர் வாழ்ந்து இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்து பௌத்த மார்க்கம் பூமிப் பரப்பில் ஆங்காங்கே செழித்திருந்த காலகட்டம். பர்மா எனும் தேசத்தில் தவுங்கூ எனும் ராஜ்யம் நடந்திருந்தது. அதோடு ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவி போலிருக்கும் சியாம் நாட்டில் அயுத்தயா ராஜ்யம் நடந்திருந்தது. பர்மாவை பேரரசன் பயின்னவுங் ஆண்டிருந்தான். சியாமின் மாமன்னன் மஹா சக்கரபத். இருவருக்கும் மாளாப் பகை. அஃது இரண்டு நிலங்களின் முரணாகத் திரண்டு யுத்தங்கள் நிகழ்ந்தன. பதினைந்து ஆண்டுகள் முன் பர்மா போரெடுத்து ஆக்ரமிக்க முயற்சி செய்த போது, சியாம் தற்காத்துக் கொண்டது.
அப்போது பயின்னவுங் பர்மாவின் இளவரசனாக இருந்தான். அத்தோல்வி அவனுக்குள் புகையிலைக் கங்கு போல் கனன்று கொண்டே இருந்தது. தவுங்கூ ராஜ்யத்தை பர்மா தாண்டி விரித்து எழுத வேண்டும் என்பது அவனது பெருங்கனவு. மன்னனாகப் பட்டம் சூடியதுமே அதற்கான முயற்சிகளில்தான் முதலில் இறங்கினான். கங்லெய்பாக், லான் நா, சீனத்தின் ஷான் மாகாணங்கள் என பர்மாவைச் சுற்றி இருந்த சகல நாடுகளையும் போரிட்டுத் தன் வசமாக்கினான். பர்மாவின் வரலாறு அதுகாறும் கண்டிராத மானுட சக்திப் பெருவெடிப்பாக பயின்னவுங்கின் திக்விஜயங்கள் அமைந்தன. தென்கிழக்கு ஆசியாவின் பெரிய சாம்ராஜ்யத்தின் எல்லைக் கோட்டைக் குருதியால் வரைந்தான்.
மஹாராஜன் பயின்னவுங்குக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்த ஒரே மண் சியாம்!
அது அவனது மனதில் கிடந்து சதா உறுத்திக் கொண்டே இருந்தது. இடையே அவனது தினவுக்குப் பதிலளிக்க வந்த யாழ தேவி மூன்றாவது மனைவியாக மாறிப் போனாள். முதலிரு ராணிகளின் செல்வாக்கைப் பெருமளவில் அழித்தொழித்து மேலேறிய பிறகு அவள் பயின்னவுங் காதில் ஓதினாள் - அவன் பர்மாவை மாபெரும் சாம்ராஜ்யமாகக் கட்டியமைக்க வேண்டுமெனில் இறை நிமித்தம் அவன் பக்கம் இருந்தாக வேண்டும்.
“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும், தேவி?”
“வெள்ளை யானைகளை அடைய வேண்டும்.”
“என்ன?”
“பக்கத்திலிருக்கும் சியாமின் அயுத்தயா ராஜ்யத்தில் நான்கு வெள்ளை யானைகள் வைத்திருக்கிறார்கள். அவற்றில் இரண்டைச் சினேகமாகவே கேட்டு வாங்குங்கள்.”
“தருவார்களா?”
“மறுத்தால் பிடுங்குவோம்.”
“ஆனைக்குப் போரா!”
“இல்லை. ஆசிக்கு.”
“இதை எல்லாம் நீ நம்புகிறாயா?”
“சர்வ நிச்சயமாக. சக்ரவர்த்தி என்பவன் வெண் வாரணங்களின் அதிபதி என்பதை உறுதியாக நம்புகிறேன். வரலாற்றில் இருந்து இதற்கு உதாரணங்கள் காட்ட முடியும். நமது பர்மாவின் வரலாற்றில் இருந்தும் சரி, சியாமின் சரித்திரத்தில் இருந்தும் சரி.”
“ம்ம்ம்.”
“தெரவாடா பௌத்தம் என்ன சொல்கிறது? நம் புத்தர் எப்படிக் கருவானார்? அரசி மாயா ஆறு தந்தங்கள் கொண்ட ஒரு வெள்ளை யானை தன் வயிற்றின் வலப்பகுதியில் புகுவது போல் கனவு காண்கிறாள். அப்புறம் பாரத நாடு தெரியுமல்லவா? அங்கு இந்து மதத்தில் தேவர்களின் அரசன் இந்திரன் என்பவனின் வாகனம் ஐந்து தலைகள், நான்கு தந்தங்கள் கொண்ட ஐராவதம் என்ற வெண்களிறு. வெள்ளை யானை என்பது தெய்வாம்சம். அது நம்முடன் இருப்பது நமது வெற்றிகளையும் உறுதி செய்யும், உங்கள் பாதுகாப்பையும்.”
“பிரமாதம், தேவி. உனது வசீகரம் என்பது முலையில் மட்டுமல்ல; மூளையிலும்தான்.”
“நேற்று வேறொரு வசனம் சொன்னீர்களே!”
“என்ன அது? மறந்து போனேன், நினைவூட்டு.”
“மனதிலிருந்து வந்திருந்தால் மறக்குமோ?”
“வசனங்களை கேட்பவர்கள்தாம் நினைவில் நிறுத்துவார்கள். சொல்பவர்கள் அல்ல.”
“ம்.”
“சொல், அப்படி என்ன சொன்னேன்?”
“தாயின் மடியும் தாரத்தின் பிருஷ்டமும்தான் உலகின் மகத்தான தலையணைகள்.”
“அடடா! ஆனால் அது பிற்போக்குச் சிந்தனை, தேவி. இன்று முற்போக்குக்கான நாள்.”
சொல்லி விட்டு மல்லாக்கப் படுத்திருந்த யாழ தேவியின் மீதேறி அவளது ஆடைச் சுமை நீக்கினான் பயின்னவுங். நன்கு வளர்ந்த ஆண் யானையின் பரிசுத்தமான தந்தத்தைப் போல் பளீரிட்ட அவளது கொழுப்பு படர்ந்த வயிற்றில் முத்தமிட்டு விட்டுச் சொன்னான் -
“வெள்ளை யானைகளை அடைவேன். ஆனால் என் அதிர்ஷ்ட வெண்களிறு நீதான்!”
விடிந்ததும் அயுத்தயா ராஜ்யத்துக்குத் தூதுவனை அனுப்பினான் பயின்னவுங். மன்னன் மஹா சக்கரபத் சற்றும் யோசிக்காமல் மறுத்து பதிலனுப்பினான் - “சியாம் மண்ணின் வெண்களிறைத் தருவது நாட்டின் மஹாராணியைத் தருவதற்குச் சமானம். முடியாது. மறுத்தால் போர் மூளும் என்றால் அதையும் சந்திக்கத் தயார். வரலாறு திரும்பட்டும்.”
பயின்னவுங் உண்மையில் அந்தக் கணம் வரையிலும் யுத்தம் நடத்துகிற எண்ணத்தில் இருக்கவில்லை. ஆனால் அந்தக் கடைசி வரியில் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய பர்மாவின் தோல்வியை மஹா சக்கரபத் எள்ளலாக அடிக்கோடிட்டிருந்தது எரிச்சலை ஊட்டியது. யாழ தேவி மேலும் அவனைச் சீண்டி விட - “கேட்டுப் பெற்றால் இரு வெண் களிறுதான், வென்றெடுத்தால் நான்கும் நமதே!” - அவசரமாகப் போர் தொடங்கியது.
அயுத்தயா ராஜ்யம் அறுபதினாயிரம் பர்மியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. போர்த்துக்கீசியக் கப்பல்களையும் பீரங்கிகளையும் பயின்னவுங் இறக்கினான். மூன்று நாட்களில் சியாம் கோட்டை வீழ்ந்தது. அரசன் மஹா சக்கரபத் சரணடைந்து சமாதான உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டான். அயுத்தயா அரசு தவுங்கூ ராஜ்ய ஆளுகைக்குக் கீழ் வர வேண்டும், மஹா சக்கரபத் பர்மாவில் கைதியாக இருக்க வேண்டும் என்பதோடு சியாமில் இருந்த நான்கு வெள்ளை யானைகளையும் பர்மாவுக்குத் தந்து விட வேண்டும்.
மஹா சக்கரபத்திடம் பயின்னவுங் சொன்னான்: “உன் மஹாராணியைப் பார்த்தேன். மாதவிலக்கு நின்று விட்டதா நிற்கப் போகிறதா எனத் தெரியவில்லை. ஆனாலும் நீ இந்த அற்புதமான வெள்ளை யானைகளோடு அக்கிழவியை ஒப்பிட்டிருக்கக்கூடாது.”
பயின்னவுங் மீது வெறுமையாக ஒரு பார்வையை வீசினான் மஹா சக்கரபத். பிறகு சொன்னான்: “பொறுத்துப் பார், என் மண்ணின் யானைகள் உன் ராஜ்யம் அழிக்கும்.”
யாழ தேவியின் ஆலோசனைப்படி நான்கு வெண் யானைகளையும் தேசத்தின் நால் திசைகளிலும் இருத்தி வைக்க முடிவானது. அதுவே சகல திக்குகளிலும் நாட்டிற்கு வெற்றியையும் காப்பையும் அளிக்கும் என நம்பினாள். பர்மிய எல்லையிலிருந்து பாதுகாப்பான தொலைவில் கானகப் பகுதிகள் கண்டறியப்பட்டன. அங்கே யானை வாழும் நல்ல சூழல் கொண்ட வகையிலான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.
அப்படிப் பர்மாவுக்கு வந்த நான்கு வெண் வேழங்களில் ஒன்று ரத்த நந்தகா. சியாம் தேசம் இருக்கும் மேற்கு திசையில் உள்ள வனப் பிரதேசத்தில் அது நிறுத்தப்பட்டது.
*
சுமார் இருபதாண்டு யானைப் பாகனாக இருந்து அனுபவமேறிய நரது ரத்த நந்தாவின் முதன்மைக் கவனிப்பாளனாகப் பணியமர்த்தப்பட்டான். அவன் குடும்பத்துடன் சிறப்பு முகாமுக்கு குடிபெயர்ந்தான். குடும்பம் என்பது அவன், அவனது மனைவி சந்தா, அவளது தங்கை தம்மா என்ற மூவர். அவர்கள் போக, அம்முகாமின் நீர், நிலம், மரம், மிருகத்தைப் பராமரிக்கச் வேலையாட்களும், காவல்காரர்களும் இருந்தார்கள். யாவரும் நரதுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்கள். அங்கே ஓர் நிலச்சுவான்தார் போல் இருந்தான் நரது.
முகாமின் மையத்தில் பெரிய கொட்டடி இருந்தது. உயரக் கூரை வேய்ந்த பரந்து விரிந்த இடம். அங்கிருந்து குரல் கேட்கும் தொலைவில் ஒரு குடில். அங்கே நரதுவின் குடித்தனம். சற்று தொலைவில் ஒரு பெரிய ஏரி. யானை குளிக்கவும் களிக்கவுமான நீர்நிலை அது. அது போக ஒரு கரும்புக் காடு, யானை திரிவதற்கேற்ற சிறிய வனப் பகுதி, முறித்து விளையாட ஏதுவான மூங்கில் மரங்கள் நிறைந்த பிரதேசம் எல்லாம் இருந்தது. அந்த முகாமைச் சுற்றிச் சற்று சீரற்ற வட்டமாக எல்லைக் கோடு இட்டது போல் முள் வேலி.
நரதுவுக்கும் சந்தாவுக்கும் திருமணமாகிப் பத்தாண்டுகள் தீர்ந்தும் மகவு இல்லை. அது பற்றிய குறை அவர்கள் இருவர் மனதிலும் வடுவாக இருந்தது. அது யார் மீதான குறை என்ற வினாவுக்குள் போகாமல் சுமூகம் காக்க தாம்பத்ய உறவுதான் துணை நின்றது. இருவரும் பரஸ்பரம் பிய்த்துத் தின்று பின்னிக் கிடக்காத இரவுகள் அரிது. சில சமயம் பகல்களும் கூட கூசிக் கண் மூடிக் கொண்டன. திகட்டாத இன்பத்தில் திளைத்தார்கள். ஆனால் அவர்கள் என்ன செய்தும் சந்தாவின் வயிறு மட்டும் மௌனமாகவே இருந்தது.
மிகச் சில தினங்களில் யானையைக் கையாள நரதுவுக்கு உதவியாக இருக்க மின்சா அங்கே வந்து சேர்ந்தான். அவனுக்குப் பதின்மம் தீர்ந்து கொண்டிருந்தது; பதிலாக மீசை அடர ஆரம்பித்திருந்தது. மூன்று திங்கள்கள் முன் மின்சா முதலில் ரத்த நந்தகாவையும் பின் தம்மாவையும் ஒரே நாளில் பார்த்தான். இருவருமே தன் வாழ்வில் பெரும் மாற்றம் உண்டாக்கப் போகிறார்கள் என்பது முதல் பார்வையிலேயே புரிந்து விட்டது அவனுக்கு.
முதலில் தம்மா சிறுமி என்றே அவனுக்குத் தெரியவில்லை. பருவப் பெண்ணுக்குரிய அகலம் கொண்டிருந்தாள். பேசிப் பழக ஆரம்பித்த சில நாட்களில் விஷயம் புரிந்தது. ஒரு வகையில் மின்சா காத்திருந்தான். சொற்களில், செயல்களில் குழந்தையாகவும் குமரியாகவும் மாறி மாறி விளையாட்டுக்கள் காட்டிக் கொண்டே இருந்தாள் தம்மா.
ஆனால் தம்மா எந்த விகற்பமும் இல்லாமல் மின்சாவுடன் பழகினாள். அவளுக்கு அந்த வெள்ளை யானை மீது ஒரு கவர்ச்சி இருந்தது. ஆனால் நரது எவரையும் அதன் அருகே நெருங்க விடுவதில்லை. சந்தாவே அதனிடம் தள்ளித்தான் நிற்க வேண்டும். மின்சாவும் உடனிருந்து ஒத்தாசைகள் செய்யலாமே ஒழிய ரொம்ப நெருங்கச் சந்தர்ப்பம் இல்லை. அரச கட்டளையும் அதுவே. அது புனிதம். நரதுவே கூட அனாவசியமாக அதன் மீது ஏறக் கூடாது. அதன் மீது பொறுப்பு மட்டுமே அவனுக்கு இருந்தது; உரிமைகள் ஏதும் இல்லை.
தம்மா தனக்கும் ரத்த நந்தகாவுக்குமான பாலமாக மின்சாவைப் பார்த்தாள். அது போக, பாதுகாப்பு கருதி அந்த யானை முகாமிற்கு அருகே மற்ற குடியேற்றங்கள் ஏதுமில்லை. எனவே அத்தனித்த வனாந்திரத்தில் அவள் வயதொத்த ஒரே தோழனும் அவன் மட்டுமே.
தம்மாவுக்கு யானைகள் புதிதல்ல. நரது மட்டுமல்ல, அவளது தகப்பனாரும் காடுகளில் பிழைப்புப் பார்த்தவர்தான். ஆனால் அவள் அது வரை வெண் யானை என்ற ஒன்றைப் பார்த்ததே இல்லை. அதனால் ஆர்வமாக வந்தாள். அவள் முதலில் ரத்த நந்தகாவைப் பார்த்ததும் ஏமாற்றமே மிஞ்சியது. அவள் எதிர்பார்த்து வந்தது வெள்ளை வெளேரென வான் மேகப் பொதி போல் ஒரு பிரம்மாண்டத்தை. ஆனால் ரத்த நந்தகா அத்தனை வெள்ளையாக இல்லை. வழமையான யானையின் வெளிறிய வடிவமாகவே இருந்தது. சற்றே சிவப்பும் கொஞ்சம் பழுப்பும் புணர்ந்து உருவான வண்ணம் கொண்டிருந்தது. முழுக்க நீரில் நனைந்து எழுகையில் ஒருவிதமான இளஞ்செம்மை நிறத்தை எட்டியது.
ரத்த நந்தகாவின் உடலில் அவள் எதிர்பார்த்தது போல் மாசு மருவற்ற வெண் வண்ணம் தரித்திருந்தது அதன் வளைந்த, வலுத்த தந்தங்கள் மட்டுமே. ஒவ்வொரு முறை அந்தத் தந்தங்களைக் காணும் போதும் தம்மாவுக்கு உடலெங்கும் ஒருவிதப் பரவசம் பரவும். அவற்றை ஸ்பரிசித்துப் பார்க்கும் இச்சை எழும். ஆணுக்கு மீசை போல் ஆனைக்குத் தந்தம் என்று தம்மாவுக்குத் தோன்றும். அதற்குரிய கம்பீரத்தை அதுவே அளிக்கிறது.
ரத்த நந்தகா என்ற அதன் பெயரே முதலில் தம்மாவுக்கு வாயில் நுழையவில்லை. தம்மா, சந்தா என்ற எளிமையான பெயர்கள் வைத்தால் என்ன என நினைத்தாள். மின்சாதான் அவளுக்கு அதிலிருக்கும் அரசியல் சூட்சமங்களை விளக்கினான். பாலி பாஷையில் ரத்த நந்தகா என்பதன் பொருள் தேசப் பிரியம், முடிவற்ற மகிழ்ச்சி, செல்வச் செழிப்பு. தன் பெயருக்கும் அது போல் ஏதாவது ஓர் அர்த்தம் இருக்குமோ என்று யோசித்தாள் தம்மா.
மின்சாவிடம் கேட்ட போது “அனேகமாகப் பேரழகி என்பதாக இருக்கும்” என்று அவன் சொன்னான். அவள் சட்டெனத் திரும்பி அவனைப் பார்த்துக் கலகலவென சிரித்தாள்.
மின்சா அபினி நுகர்ந்தது போல் உற்சாகமாகி அவளை நெருங்கிப் புன்னகை ஈந்தான்.
*
அந்த முகாம் வந்ததில் இருந்தே ரத்த நந்தகா ஒரு விதப் பதற்றத்துடன்தான் இருந்தது. எவருடனும் இணக்கம் காட்டவில்லை. ஒருவித ஆக்ரோஷம் அதை ஆக்ரமித்திருந்தது.
புது நிலம், புது மனிதர்கள் என்ற சூழற்சிக்கல் காரணமாக இருக்கும் என நரது முதலில் நினைத்தான். ஓரிரு வாரத்தில் சரியாகி, இயல்பாகி விடும் என்றுதான் எதிர்பார்த்தான். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. அது அவனிடம் தன்னை ஒப்புக் கொடுக்கவே இல்லை. பெரிய பெருமூச்சுகள் அதனிடமிருந்து சதா வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. கண்கள் சிவந்தே காணப்பட்டன. அதன் கால்கள் எப்போதும் எதையேனும் மிதித்தெறிய வேண்டும் என்ற பசியுடன் இருப்பது போல் தென்பட்டது. எல்லோரும் அதை நெருங்கத் தயங்கினார்கள். யானைகளுடன் அத்தனை அனுபவம் கொண்ட நரதுவே எப்போதும் ஓர் அச்சத்துடனே அதனை அணுக வேண்டி இருந்தது. எல்லாவற்றுக்கும் உச்சமாக யானை அங்கே வந்த ஒரு மாதத்துக்குப் பின் அதைக் கண்டு அதன் நிலை பற்றிக் குறிப்பெழுதிப் போக வந்த இரு அரசுப் பிரதிநிதிகளை ஓட ஓடத் துரத்தித் தூக்கித் தூரமாக எறிந்தது. அதில் ஒருவனுக்கு இடுப்பெலும்பு உடைந்தது. மற்றவன் பயத்தில் சுவாதீனம் கெட்டான்.
பயின்னவுங் கவலைப்பட்டான். அவனுக்கு மஹா சக்கரபத் சரணடையும் போது வெண் யானை பர்மாவை அழிக்கும் என்று சொன்ன எச்சரிக்கை நினைவு வர, யாழ தேவியிடம் புலம்பினான். அவள் கொஞ்சமும் பதறாமல் அவனைப் பொறுமை காக்கச் சொன்னாள்.
“மனிதன் எப்படி மாற்றத்துக்கு மனமொப்ப மாட்டானோ அப்படியே குஞ்சரங்களும்!”
“நரனும் ஆனையும் ஒன்றா?”
“அரசே, யானை பல விஷயங்களில் மனிதனைப் போன்றதே. இன்னும் சொன்னால் சில பழங்குடிகளிடம் ஒரு கதை உண்டு - மனிதன்தான் யானையாக மாறி விட்டான் என.”
“அப்படியா!”
“ஆம். சிறு வயதில் நான் கேட்ட கதை. ஓர் ஊருக்கு ஒரு துறவி வந்தார். அங்கே வாழ்ந்த ஓர் ஏழை அவரிடம் போய் தான் பெரும் பணக்காரனாக வேண்டும் எனக் கோரினான். துறவி புன்னகையுடன் ஒரு களிம்பை அவனுக்குக் கொடுத்து அதை அவன் மனைவியின் கோரைப் பற்களில் தடவச் சொன்னார். அவனும் பெண்டாட்டியிடம் கெஞ்சிக் கூத்தாடி அதற்குச் சம்மதிக்க வைத்தான். சில தினங்களில் அவளது பற்கள் கையின் நீளத்துக்குப் பெரிதாக வளர்ந்தன. அவை தந்தங்களாகப் பளபளத்தன. மனைவியின் வலியைப் பொருட்படுத்தாமல் ஏழை அவற்றை வெட்டிக் கொண்டு போய் சந்தையில் விற்றான்.”
“ஐயய்யோ!”
“கேளுங்கள். பணம் கையில் நிறைந்தது. ஏழை அன்று இரவு வந்து மறுபடி மனைவியின் கோரைப் பற்களில் களிம்பு தடவினான். கண்ணீருடன் அவள் பொறுத்துக் கொண்டாள். ஆனால் இம்முறை தீர்மானித்து விட்டாள் - தந்தங்களை வெட்ட அனுமதிக்கக்கூடாது. வளர்ந்ததும் அவன் வெட்ட எத்தனிக்க, அவள் முரண்டு பிடித்து மறுக்க, அவர்களுக்குள் சண்டை வந்தது. கணவன் செய்வதறியாது திகைத்து நின்றான். கெஞ்ச ஆரம்பித்தான். அவள் இரங்கவே இல்லை. இறங்கி வரவே இல்லை. மெல்ல அவளது உடலும் பெரிதாக வளர்ந்தது. சில நாட்களில் அவள் ஒரு முழு யானையாகிப் போனாள். அந்த வீட்டையும் புருஷனையும் விட்டு காட்டுக்குப் போனாள். அங்கே குட்டிகள் ஈன்றாள். அதுதான் முதல் யானைச் சந்ததி. அப்படி மனுஷிதான் இப்பூமியில் யானை இனமாக மாறிப் போனாள்.”
“…”
“அதனால் பெண்ணின் அத்தனை அற்பத்தனங்களும் யானையிடம் இருக்கும். அதில் ஒன்றுதான் இந்த வெள்ளை யானையிடம் இருக்கும் காரணமற்ற முரட்டுப் பிடிவாதம். ஆனால் அதே சமயம் பெண்ணின் அத்தனை தாய்மையும் அருளும் யானையிடம் குடி கொண்டிருக்கும். பொறுமையாக இருங்கள். சரியாகும். எல்லா இரவும் விடிந்தே தீரும்.”
பயின்னவுங் அதை அப்படியே விட்டு விடத் தீர்மானித்தான். நரது அதன் பராமரிப்புக்குத் தேவையானதை அரசாங்கத்திடம் விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம். மாதம் ஒரு முறை நரது அது பற்றி அரசுக்கு அறிக்கை தர வேண்டும். அரசு எவ்வகையிலும் ரத்த நந்தகாவைத் தொந்தரவு புரியாது. அப்படித்தான் மாதங்கள் சில ஓடிப் போயிருந்தன.
மின்சா நரதுவுக்கு உதவியாளனாக வந்து சேர்ந்தது அந்தச் சலுகையில்தான். அவனுக்கு யானைக்குப் பக்குவமாகக் கவளம் உருட்டவும், அதன் லத்தியை அள்ளித் தள்ளவும், அதன் பெருவுடலைக் குளிப்பாட்டிச் சுத்திகரிக்கவுமான கடமைகள் அளிக்கப்பட்டன.
மின்சா நரதுவின் பணியைப் பாதி ஆக்கினான். ஆனால் அவனுக்கு முக்கியச் சவாலாக இருந்தது ரத்த நந்தகாவைச் சமாதானப்படுத்த, சாந்தப்படுத்த இயலவில்லை என்பதே.
நரது தனக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் அதனிடம் பிரயோகித்துப் பார்த்தான். தோல் கருவிகளை வைத்து ஓசை எழுப்பி இரவுகளில் அதனைத் தூங்க விடாமல் செய்து பார்த்தான். உறக்கமின்மை அதனைப் பலவீனமாக்கி இறுதியில் அடி பணியச் செய்யும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் அது இரவில் விழித்திருந்து விட்டு பகலில் நன்றாக உறங்க ஆரம்பித்தது. அதற்குத் தரும் கவளங்களின் ருசியைக் குறைத்தான், அடுத்து அளவைக் குறைத்துப் பார்த்தான். அதன் நடமாட்டம் முடக்க, பெரும்பாலான நேரம் சங்கிலியால் பிணைத்தே வைத்துப் பார்த்தான். ஆனால் எதற்கும் ரத்த நந்தகா மசியவே இல்லை.
அடுத்து நரது தன் அங்குசத்துக்குப் பழகிய மற்ற யானைகள் வைத்து அதனை மிரட்டப் பார்த்தான். ஆனால் ரத்த நந்தகாவை விட அளவில் பெரிய யானைகளும் கூட அதன் மூர்க்கத்துக்கு அஞ்சிப் பின்வாங்கின. இறுதி முயற்சியாக ஒரு பெண் யானையை ரத்த நந்தகாவிடம் அழைத்து வந்தான். இரண்டும் நெருங்கி பரஸ்பரம் மோப்பம் பிடித்துக் கொண்டு உரசின. சட்டென ரத்த நந்தகா அந்தப் பெண் யானையை தனது தந்தத்தை வைத்து இடித்துத் தள்ள, அது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தெறித்தோடியது.
அதற்கு மென்மையாக மதம் பிடித்திருக்கிறதோ என்று கூட அவனுக்குத் தோன்றியது.
வெண்களிறுகளை எவ்வகையிலும் உடலளவில் துன்புறுத்தக்கூடாது என்பது பர்மிய அரசின் சட்டம். அது ராஜதுரோகத்துக்கு இணையாகக் கருதப்படும். பாகன் அங்குசம் வைத்துக் கொள்வது கூட யானையை மிரட்ட மட்டுமே; குத்திக் காயப்படுத்தக் கூடாது. மீறியவர்களுக்குக் கடும் தண்டனை உண்டு. வெள்ளை யானைகள் குறைவு என்பதால் இதெல்லாம் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. பொதுவாகப் பாகன்கள் வெள்ளை யானையைப் பராமரிக்க முன்வருவதில்லை. அதனால் இவ்வேலைக்கு வருவோருக்குப் பெருஞ்சம்பளமும் நல்ல வசதிகளும் செய்து தருவது வழக்கம். நரது அது நாள் வரை வெண்களிறுகளைப் பார்த்துக் கொண்டவன் அல்லன். ஆனால் இம்முறை வசதிகளின் பொருட்டு முயற்சி செய்து பார்க்க எண்ணி, அரசு கேட்ட போது ஒப்புக் கொண்டான்.
மின்சாவுக்கு சிறந்த யானைப் பாகனாக வேண்டும் என்பதுதான் வாழ்நாள் லட்சியம். அவனுக்கு யானையை நெருங்கிக் கையாள, குறிப்பாக அதன் மீதேறிச் சவாரி செய்ய ஆர்வமும் தைரியமும் இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவே இல்லை. நரது கண்டிப்பானவன் என்பது முக்கியக் காரணம். ஒரு முறை மின்சா யானைக்குக் குளியல் காட்டிக் கொண்டிருந்த போது சற்று நேரம் அதன் முதுகிலேறி அமர்ந்ததை நரது பார்த்து அவனை அறைந்து விட்டான், அதுவும் தம்மா முன்பாக. அவள் அவன் மீது பரிதாபப்பட, அவன் தடுமாறி யானைச் சாணி அள்ளும் கூடை மீது விழுந்தது கண்டு சந்தா மெல்லச் சிரித்தது போலிருந்தது. சந்தா சிரித்ததை விட தம்மாவின் பரிதாபம் அதிகம் வலித்தது. அதிலிருந்து அவன் தனது கடமைகளைத் தாண்டி ரத்த நந்தகாவைத் தீண்டுவதில்லை.
அப்படி அவன் கட்டுப்பாடு காத்திருந்த போதுதான் தம்மா வந்து மின்சாவிடம் கேட்டாள் - ரத்த நந்தகாவின் முதுகிலேறிச் சவாரி போக வேண்டும் என. மின்சாவை ஒரு பக்கம் தயக்கம் உந்த, தம்மாவின் கெஞ்சல் முகமும், அவனது காதல் மனமும் அதை உதாசீனம் செய்தது. உடனே உற்சாகமாக ஒப்புக் கொண்டான். மின்சாவின் தயக்கத்துக்கு நரது மட்டும் காரணமல்ல; ரத்த நந்தகா பிளிறிக் காட்டிக் கொடுத்து விட்டாலோ, வெறியேறி ஏதும் அசம்பாவிதச் செயல்கள் நடத்தி விட்டாலோ என்ற கவலையும்தான். ஆனால் தன்னை நம்பிக் கேட்டவளிடம் தன் வீரம் நிரூபிக்க நல்ல சந்தர்ப்பம் அது. தம்மாவின் மனதில் நெருக்கமாக, அழுத்தமாக இடம் பெற அழகான வாய்ப்பு. எனவே மின்சா தவற விட விரும்பவில்லை. நரது இரவில் கள் அருந்தும் நாள் அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நரதுவின் கள்ளும் கலவியும் முடிந்து தேகம் சாய்த்துக் கண்ணயர்ந்து குறட்டை விட்ட பிறகு தம்மா சற்றும் சப்தம் எழுப்பாமல் மெல்ல எழுந்து குடிலின் கதவின் தாழ் நீக்கித் திறந்து, சற்று தூரத்தில் இருக்கும் யானைக் கொட்டடிக்கு வந்து விட வேண்டும். அங்கே மின்சா அவளுக்காக உறங்காமல் காத்திருப்பான். பின் யானையை எழுப்பி அதன் மீது இருவரும் சிறிது தூரம் சவாரி செய்து விட்டுத் திரும்புவதுதான் திட்டம். பின் அவள் வந்த வழியே மறுபடி குடிலுக்குப் போய்ப் படுத்துக் கொண்டு விடுவது. எளிமையான ஏற்பாடு.
அப்படித்தான் அந்த இரவில் தம்மா சிறுமியாக யானை மீதேறி குமரியாக இறங்கினாள்!
மறுநாள் தம்மா ருதுவடைந்த செய்தி முகாமில் அறிவிக்கப்பட்டது. அது அவர்கள் மரபு.
வயதடைந்த பெண்ணை எல்லோரும் பொறுப்புடன் அணுக வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. ஆடவர்கள் அந்தப் பெண்ணை அதன் பிறகு தொடத் தடை, உற்றுப் பார்க்கக் கூடாது, உறுத்தலாகப் பேசலாகாது. ஓரிரு நாளில் குறைந்த அளவிலான உறவினர்கள் அந்த முகாமுக்கு வரவழைக்கப்பட்டு பூப்படைதல் சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைவேற்றப்பட்டன. அதன் ஒரு பகுதியாக தம்மா சிறுமிக்கான உடைகளை விடுத்து பெண்ணின் உடைகளைத் தரித்தாள். விதவிதமான இனிப்புப் பண்டங்கள் அவளுக்கு வழங்கப்பட்டன. மாதா மாதம் வயதுக்கு வந்தால் நன்றாக இருக்குமே என அவளுக்குத் தோன்றியது. இளம் பெண்கள் அவளைச் சூழந்து கொண்டு ஆபாசக் கேலி செய்தனர். அவர்களை விரட்டி விட்டு சில கிழவிகள் அவளது காதோடு காதாக அறிவுரைகளும் எச்சரிக்கைகளும் சொன்னார்கள். மின்சா பார்த்த அளவில் தம்மா முதன் முறையாக வெட்கப்பட்டாள். அவனுக்குத் தடை நீங்கித் தன் பாதை தெளிந்தாற் போலிருந்தது.
தம்மா யோசித்தாள். அவள் உடல் இளகிப் பிளந்த போது அவளை ஸ்பரிசித்திருந்தது இரு ஆண்கள். ஒன்று ரத்த நந்தகா, மற்றது மின்சா. மின்சாவைப் புதிதாகப் பார்த்தாள். அழகன்தான். தன் அக்காள் கணவனை விடவும் மென்மையானவன், தன்மையானவன். அக்குளிர் பிடித்த இரவில் யானையில் அவளை ஏற்றிப் பின் தான் ஏறி அவளது இடை சுற்றிக் கரம் போட்டுப் பாதுகாப்பாக அணைத்துக் கொண்ட மின்சாவின் லாகவம் நினைவில் வந்தது. வாழ்நாள் முழுக்க அந்தக் கையின் அணைப்பிற்குள் இருப்பது சொகுசுதான். அப்படி எண்ணிய போது என்ன நினைப்பு இது என்று அச்சப்பட்டாள்.
ஆனால் அவனை நினைக்கச் சுகமாக இருந்தது. பெரியவளான பின் சந்தா அவளுக்கு நிறையக் கட்டுப்பாடுகள் விதித்தாள். எனவே மின்சாவைப் பார்க்கவும் பேசவும் தம்மா உறுத்தாத காரணங்களை உண்டாக்கிக் கொண்டாள். அவனை நிறைய கவனித்தாள்.
சரியாகச் செதுக்கப்படாத மீசை அவன் முகத்தை மேலும் ஈர்ப்புக்குரியதாக்குவதாகத் தோன்றியது. அவன் ஒருமுறை அவளது பெயரின் பொருள் ‘பேரழகி’ என்று சொன்னதை எண்ணி எண்ணி நாணம் கொண்டாள். எனில் அவனுக்கும் தன் மீது சாய்வு இருக்கிறது எனக் கணித்தாள். ஆனால் அவனே தன் விருப்பம் சொல்லட்டும் எனக் காத்திருந்தாள்.
அதன் பின் தம்மாவும் மின்சாவும் அவ்வப்போது இரவுகளில் திருட்டுத்தனமாக யானை மீது உலாப் போக ஆரம்பித்தனர். மின்சாவின் தீண்டலில் மெல்லிய மீறல்கள் இருந்தன என்பதை தம்மா உணர்ந்து தனக்குள் புன்னகை செய்து கொண்டாள். அவளது ஒப்புதல் மின்சாவை மேலும் உற்சாகம் ஆக்கி முன்னேற உந்தியது. தம்மா பருவமடைந்ததில் இருந்து சரியாக ஒரு திங்கள் கழிந்து ஒரு பௌர்ணமி நாளில் ரத்த நந்தகாவின் மீது இருவரும் அமர்ந்திருந்த தருணத்தில் பின்னிருந்து அவளது கழுத்தோரம் முத்தமிட்டு மின்சா தன் காதலை வெளிப்படுத்தினான். அவள் கிறங்கி, “ம்ம்ம்” என்ற இழுவையில் சம்மதம் சொன்னாள். பூரணை பால் பொழிய, வெண்வாரணம் உற்சாகமாக நடந்தது.
பெண்மை திறந்து பருவத்துக்கு வந்ததுமே கள்ளத்தனம் பெண்ணுக்குள்ளே நுழைந்து விடுகிறது. உடன் காதலும் சேர்ந்து விட்டால் கள்ளம் இரட்டை மடங்காகி விடுகிறது. பின் தம்மா நிறைய மறைத்தாள், மழுப்பினாள், மெய் திரித்தாள், பொய் சொன்னாள். அவளே வியக்கும் வண்ணம் நரதுவுக்கும் சந்தாவுக்கும் அவள் மீது ஒரு சந்தேகமும் எழவில்லை.
சந்தா நரதுவிடம் சொன்னாள் - தங்கை வயதுக்கு வந்து விட்டதால் இனி ராத்திரிகளில் சற்று கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என. அவன் அதைப் பெரிதாக லட்சியம் செய்யவில்லை. அந்தக் குடில் மிக எளிமையான கட்டமைப்பு கொண்டிருந்தது. வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய அறை. இடப்புறம் சமையல் கூடம், வலப்புறம் ஒரு சிறிய அறை. அந்தப் பெரிய அறையில் சந்தாவும் நரதுவும் படுத்துக் கொள்கிறார்கள். வலப்புறச் சிறிய அறையில் தம்மா படுத்துக் கொள்கிறாள். சிறிய அறைக்குக் கதவு உண்டு என்றாலும் பெரிய அறையின் சப்தங்கள் அங்கு எட்டுவதைத் தவிர்க்க முடியாது. எனவே சந்தாவுக்கு சமீப நாட்களில் ஒரு சங்கடம் புகுந்திருந்தது.
தம்மா மாதாந்திர சுழற்சிகளில் சுகாதாரமாகப் புழங்குவதைக் கற்றுக் கொண்டாள். தன் உடலின் மாற்றங்களைக் கவனித்தாள். மார்பும், இடையும், புட்டமும், தொடையும் ஒரு மாதிரி சிற்பம் போல் வடிவெடுப்பதை உணந்தாள். தன் பொன்னுடலில் சுகத்தின் ஒரு பெரும் பொக்கிஷம் பல்வேறு புள்ளிகளில் ஒளிந்திருப்பதைக் கணிக்க முடிந்தது.
வழி தெரிந்து விட்டாலும் தம்மா சுயஇன்பம் செய்யவில்லை. அந்த இன்பத்தை முதலில் மின்சாவிடம் நேரடியாகவே அடைய வேண்டும். கண் மூடிய கற்பனையாக வேண்டாம். போக, தன்னை மு
மலைப் பாறையில் படர்ந்து பரவும் அருவியாய் இரவு மீது இருள் தழுவிக் கிடந்தது. யாகத்தின் மந்திர உச்சாடனம் போல் ராப்பூச்சிகள் சதா உளறிக் கொண்டிருந்தன.
ரத்த நந்தகாவின் பரந்த முதுகின் மீது ஏறி அமர்ந்த போது தம்மாவுக்குக் கால்களின் சங்கமத்தில் குறுகுறுவென ஓர் உணர்வு ஓடியது. முதலில் அந்த வெண்யானையின் ரோமக் கம்பிகள் தன் அந்தரங்கத்தில் குத்துவதாகத் தோன்றி, இடுப்பாடை அள்ளிச் செருகித் தடுப்பு செய்தாள். அப்போதும் அந்த வினோதக் குறுகுறுப்பு நீங்கவில்லை.
எனில் அது இல்லை. வேறு என்ன? யோசித்துக் கொண்டிருக்கும் போதே அடிவயிறு வலிக்க ஆரம்பித்தது. கண்களை இறுக மூடி வலி தாங்கிய சில கணங்களில் குருதி கசியப் பூப்படைந்தாள். அஃது புரிந்தோ புரியாமலோ வெள்ளைக் களிறு பிளிறியது!

அந்த வாலைக் குமரியின் அறியாமையை, ஆர்வத்தை புது வனப்பும் மிகு வெட்கமும் ஆட்கொண்டன. அவளுக்குப் பின் அமர்ந்து, ஒரு கையில் அங்குசத்துடன் மறுகரத்தை அவளது வறிய இடையைச் சுற்றித் தயக்கமாகப் போட்டிருந்த மின்சாவைச் சட்டெனத் தள்ளி விட்டு யானையின் முதுகிலிருந்து சரிந்திறங்கி குடில் நோக்கி ஓடினாள் தம்மா.
மின்சா புரியாமல் விழித்தான். ஏன் இவள் இப்படித் திடீரெனப் பரபரத்து ஓடுகிறாள்? அவளாகத்தானே ரத்த நந்தகா என்கிற அந்த வெண்வாரணம் மீதேறிச் சவாரி போக வேண்டும் என இந்தப் பின்னிரவில் ரகசியமாகத் தன்னை இங்கே அழைத்து வந்தாள்!
தம்மா இறங்கியதும் ஆர்வம் தீர்ந்தது என்பது போல் ரத்த நந்தகா தன் பிரம்மாண்ட உடலை மெல்லச் சிலிர்த்தது. மின்சா தடுமாறி, அவசரமாகக் கீழே சறுக்கினான். ஒரு ராட்சசப் பட்சி இறகை உதிர்ப்பது போலிருந்தது அக்காட்சி. மின்சா எரிச்சலுற்றாலும் அதன் செயல் ஆச்சரியமளிக்கவில்லை. அது வந்த நாளிலிருந்து அப்படி முரடாகத்தான் இருக்கிறது. மாறாக, அவனுக்கு வியப்பளித்தது சற்று முன் அவனும் தம்மாவும் வந்து அதன் அருகே நின்ற போது இருவரும் அதன் மேலேறச் சாதுவாக ஒத்துழைத்ததுதான்.
விழுந்ததில் நேர்ந்த முழங்கால்ச் சிராய்ப்பைப் பொருட்படுத்தாமல் மின்சாவும் அவள் பின்னே ஓடினான். கடந்த மூன்று மாதங்களாக அவன் அவள் பின்னால் அப்படி ஓடிக் கொண்டுதான் இருக்கிறான். காதலா என்று கேட்டால் அப்படியும் சொல்ல முடியாது.
அவள் இன்னும் வயதுக்குக் கூட வரவில்லை. அவளைக் காதலிப்பதாகச் சொன்னால் அந்தக் கிராமம் ஒன்று கூடி, தலை குனிந்து நிற்கும் அவனைச் சூழ்ந்து நின்று, நெடிய அறிவுரைகள் சொல்லும். அவனுக்கு மட்டும் என்ன, அவளை விட ஐந்து வயது அதிகம். இப்போதுதான் மீசையே முளைக்கிறது. அதனால் என்ன? மணம் செய்வதற்குத்தான் வயதுக் கட்டுப்பாடு எல்லாம், காதலுக்கு எதற்கு என்று தோன்றியது. தவிர, தம்மாவும் இன்றோ நாளையோ ருதுவாகாமலா போய் விடுவாள்! பெருமூச்சு விட்டான் மின்சா.
தம்மா குடிலுக்குள் ஓடிப் போய் விட்டாள். குடிலில் விளக்கு தூண்டப்பட்டது தெரிந்தது. அவளது அக்காள் சந்தாவை எழுப்பி இருக்கிறாள். ஏன்? புரியவில்லை. திருட்டுத்தனமாக வந்தவள் திடீரெனப் பயந்து போய்த் திரும்பி விட்டாள் என்று வைத்துக் கொண்டாலும் உறங்கிக் கிடந்த சகோதரியை ஏன் அகால வேளையில் எழுப்ப வேண்டும்? எப்படியும் தன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாள் என்றே தோன்றியது மின்சாவுக்கு. அப்படிச் செய்தால் அவளும் மாட்டிக் கொள்வாள் என்பது ஒரு புறம். தம்மாவின் தங்கம் நிகர்த்த குணம் அப்படிப்பட்டது என்ற புரிதல் இன்னொரு பக்கம். அதுவே அவனை ஈர்த்தது.
இதற்கு மேல் அங்கே அவன் நின்று கொண்டிருப்பது நல்லதல்ல. நரது மட்டும் பார்த்து விட்டால் அவனைக் கொல்லவும் தயங்க மாட்டான். அவசரமாக மறுபடி ரத்த நந்தகா இருந்த இடத்துக்குத் திரும்பி வந்தான். அதை மெல்ல நடத்தி கொட்டடிக்கு அழைத்து வந்து அடைத்தான். அதன் பக்க வாட்டில் அவனுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் படுத்துக் கொண்டான். அதைப் படுக்கை என்று உளமாறச் சொல்ல முடியாது. உலர் வைக்கோல் திணிவாலான அடுக்கு. கண் செருகும் வரை தம்மா பற்றி எண்ணிக் கொண்டிருந்தான்.
பிடித்த பெண்ணை நினைத்துக் கொள்வதை விட ஒரு போதை கண்டறியப்படவில்லை.
*
புத்தர் வாழ்ந்து இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்து பௌத்த மார்க்கம் பூமிப் பரப்பில் ஆங்காங்கே செழித்திருந்த காலகட்டம். பர்மா எனும் தேசத்தில் தவுங்கூ எனும் ராஜ்யம் நடந்திருந்தது. அதோடு ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவி போலிருக்கும் சியாம் நாட்டில் அயுத்தயா ராஜ்யம் நடந்திருந்தது. பர்மாவை பேரரசன் பயின்னவுங் ஆண்டிருந்தான். சியாமின் மாமன்னன் மஹா சக்கரபத். இருவருக்கும் மாளாப் பகை. அஃது இரண்டு நிலங்களின் முரணாகத் திரண்டு யுத்தங்கள் நிகழ்ந்தன. பதினைந்து ஆண்டுகள் முன் பர்மா போரெடுத்து ஆக்ரமிக்க முயற்சி செய்த போது, சியாம் தற்காத்துக் கொண்டது.
அப்போது பயின்னவுங் பர்மாவின் இளவரசனாக இருந்தான். அத்தோல்வி அவனுக்குள் புகையிலைக் கங்கு போல் கனன்று கொண்டே இருந்தது. தவுங்கூ ராஜ்யத்தை பர்மா தாண்டி விரித்து எழுத வேண்டும் என்பது அவனது பெருங்கனவு. மன்னனாகப் பட்டம் சூடியதுமே அதற்கான முயற்சிகளில்தான் முதலில் இறங்கினான். கங்லெய்பாக், லான் நா, சீனத்தின் ஷான் மாகாணங்கள் என பர்மாவைச் சுற்றி இருந்த சகல நாடுகளையும் போரிட்டுத் தன் வசமாக்கினான். பர்மாவின் வரலாறு அதுகாறும் கண்டிராத மானுட சக்திப் பெருவெடிப்பாக பயின்னவுங்கின் திக்விஜயங்கள் அமைந்தன. தென்கிழக்கு ஆசியாவின் பெரிய சாம்ராஜ்யத்தின் எல்லைக் கோட்டைக் குருதியால் வரைந்தான்.
மஹாராஜன் பயின்னவுங்குக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்த ஒரே மண் சியாம்!
அது அவனது மனதில் கிடந்து சதா உறுத்திக் கொண்டே இருந்தது. இடையே அவனது தினவுக்குப் பதிலளிக்க வந்த யாழ தேவி மூன்றாவது மனைவியாக மாறிப் போனாள். முதலிரு ராணிகளின் செல்வாக்கைப் பெருமளவில் அழித்தொழித்து மேலேறிய பிறகு அவள் பயின்னவுங் காதில் ஓதினாள் - அவன் பர்மாவை மாபெரும் சாம்ராஜ்யமாகக் கட்டியமைக்க வேண்டுமெனில் இறை நிமித்தம் அவன் பக்கம் இருந்தாக வேண்டும்.
“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும், தேவி?”
“வெள்ளை யானைகளை அடைய வேண்டும்.”
“என்ன?”
“பக்கத்திலிருக்கும் சியாமின் அயுத்தயா ராஜ்யத்தில் நான்கு வெள்ளை யானைகள் வைத்திருக்கிறார்கள். அவற்றில் இரண்டைச் சினேகமாகவே கேட்டு வாங்குங்கள்.”
“தருவார்களா?”
“மறுத்தால் பிடுங்குவோம்.”
“ஆனைக்குப் போரா!”
“இல்லை. ஆசிக்கு.”
“இதை எல்லாம் நீ நம்புகிறாயா?”
“சர்வ நிச்சயமாக. சக்ரவர்த்தி என்பவன் வெண் வாரணங்களின் அதிபதி என்பதை உறுதியாக நம்புகிறேன். வரலாற்றில் இருந்து இதற்கு உதாரணங்கள் காட்ட முடியும். நமது பர்மாவின் வரலாற்றில் இருந்தும் சரி, சியாமின் சரித்திரத்தில் இருந்தும் சரி.”
“ம்ம்ம்.”
“தெரவாடா பௌத்தம் என்ன சொல்கிறது? நம் புத்தர் எப்படிக் கருவானார்? அரசி மாயா ஆறு தந்தங்கள் கொண்ட ஒரு வெள்ளை யானை தன் வயிற்றின் வலப்பகுதியில் புகுவது போல் கனவு காண்கிறாள். அப்புறம் பாரத நாடு தெரியுமல்லவா? அங்கு இந்து மதத்தில் தேவர்களின் அரசன் இந்திரன் என்பவனின் வாகனம் ஐந்து தலைகள், நான்கு தந்தங்கள் கொண்ட ஐராவதம் என்ற வெண்களிறு. வெள்ளை யானை என்பது தெய்வாம்சம். அது நம்முடன் இருப்பது நமது வெற்றிகளையும் உறுதி செய்யும், உங்கள் பாதுகாப்பையும்.”
“பிரமாதம், தேவி. உனது வசீகரம் என்பது முலையில் மட்டுமல்ல; மூளையிலும்தான்.”
“நேற்று வேறொரு வசனம் சொன்னீர்களே!”
“என்ன அது? மறந்து போனேன், நினைவூட்டு.”
“மனதிலிருந்து வந்திருந்தால் மறக்குமோ?”
“வசனங்களை கேட்பவர்கள்தாம் நினைவில் நிறுத்துவார்கள். சொல்பவர்கள் அல்ல.”
“ம்.”
“சொல், அப்படி என்ன சொன்னேன்?”
“தாயின் மடியும் தாரத்தின் பிருஷ்டமும்தான் உலகின் மகத்தான தலையணைகள்.”
“அடடா! ஆனால் அது பிற்போக்குச் சிந்தனை, தேவி. இன்று முற்போக்குக்கான நாள்.”
சொல்லி விட்டு மல்லாக்கப் படுத்திருந்த யாழ தேவியின் மீதேறி அவளது ஆடைச் சுமை நீக்கினான் பயின்னவுங். நன்கு வளர்ந்த ஆண் யானையின் பரிசுத்தமான தந்தத்தைப் போல் பளீரிட்ட அவளது கொழுப்பு படர்ந்த வயிற்றில் முத்தமிட்டு விட்டுச் சொன்னான் -
“வெள்ளை யானைகளை அடைவேன். ஆனால் என் அதிர்ஷ்ட வெண்களிறு நீதான்!”
விடிந்ததும் அயுத்தயா ராஜ்யத்துக்குத் தூதுவனை அனுப்பினான் பயின்னவுங். மன்னன் மஹா சக்கரபத் சற்றும் யோசிக்காமல் மறுத்து பதிலனுப்பினான் - “சியாம் மண்ணின் வெண்களிறைத் தருவது நாட்டின் மஹாராணியைத் தருவதற்குச் சமானம். முடியாது. மறுத்தால் போர் மூளும் என்றால் அதையும் சந்திக்கத் தயார். வரலாறு திரும்பட்டும்.”
பயின்னவுங் உண்மையில் அந்தக் கணம் வரையிலும் யுத்தம் நடத்துகிற எண்ணத்தில் இருக்கவில்லை. ஆனால் அந்தக் கடைசி வரியில் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய பர்மாவின் தோல்வியை மஹா சக்கரபத் எள்ளலாக அடிக்கோடிட்டிருந்தது எரிச்சலை ஊட்டியது. யாழ தேவி மேலும் அவனைச் சீண்டி விட - “கேட்டுப் பெற்றால் இரு வெண் களிறுதான், வென்றெடுத்தால் நான்கும் நமதே!” - அவசரமாகப் போர் தொடங்கியது.
அயுத்தயா ராஜ்யம் அறுபதினாயிரம் பர்மியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. போர்த்துக்கீசியக் கப்பல்களையும் பீரங்கிகளையும் பயின்னவுங் இறக்கினான். மூன்று நாட்களில் சியாம் கோட்டை வீழ்ந்தது. அரசன் மஹா சக்கரபத் சரணடைந்து சமாதான உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டான். அயுத்தயா அரசு தவுங்கூ ராஜ்ய ஆளுகைக்குக் கீழ் வர வேண்டும், மஹா சக்கரபத் பர்மாவில் கைதியாக இருக்க வேண்டும் என்பதோடு சியாமில் இருந்த நான்கு வெள்ளை யானைகளையும் பர்மாவுக்குத் தந்து விட வேண்டும்.
மஹா சக்கரபத்திடம் பயின்னவுங் சொன்னான்: “உன் மஹாராணியைப் பார்த்தேன். மாதவிலக்கு நின்று விட்டதா நிற்கப் போகிறதா எனத் தெரியவில்லை. ஆனாலும் நீ இந்த அற்புதமான வெள்ளை யானைகளோடு அக்கிழவியை ஒப்பிட்டிருக்கக்கூடாது.”
பயின்னவுங் மீது வெறுமையாக ஒரு பார்வையை வீசினான் மஹா சக்கரபத். பிறகு சொன்னான்: “பொறுத்துப் பார், என் மண்ணின் யானைகள் உன் ராஜ்யம் அழிக்கும்.”
யாழ தேவியின் ஆலோசனைப்படி நான்கு வெண் யானைகளையும் தேசத்தின் நால் திசைகளிலும் இருத்தி வைக்க முடிவானது. அதுவே சகல திக்குகளிலும் நாட்டிற்கு வெற்றியையும் காப்பையும் அளிக்கும் என நம்பினாள். பர்மிய எல்லையிலிருந்து பாதுகாப்பான தொலைவில் கானகப் பகுதிகள் கண்டறியப்பட்டன. அங்கே யானை வாழும் நல்ல சூழல் கொண்ட வகையிலான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.
அப்படிப் பர்மாவுக்கு வந்த நான்கு வெண் வேழங்களில் ஒன்று ரத்த நந்தகா. சியாம் தேசம் இருக்கும் மேற்கு திசையில் உள்ள வனப் பிரதேசத்தில் அது நிறுத்தப்பட்டது.
*
சுமார் இருபதாண்டு யானைப் பாகனாக இருந்து அனுபவமேறிய நரது ரத்த நந்தாவின் முதன்மைக் கவனிப்பாளனாகப் பணியமர்த்தப்பட்டான். அவன் குடும்பத்துடன் சிறப்பு முகாமுக்கு குடிபெயர்ந்தான். குடும்பம் என்பது அவன், அவனது மனைவி சந்தா, அவளது தங்கை தம்மா என்ற மூவர். அவர்கள் போக, அம்முகாமின் நீர், நிலம், மரம், மிருகத்தைப் பராமரிக்கச் வேலையாட்களும், காவல்காரர்களும் இருந்தார்கள். யாவரும் நரதுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்கள். அங்கே ஓர் நிலச்சுவான்தார் போல் இருந்தான் நரது.
முகாமின் மையத்தில் பெரிய கொட்டடி இருந்தது. உயரக் கூரை வேய்ந்த பரந்து விரிந்த இடம். அங்கிருந்து குரல் கேட்கும் தொலைவில் ஒரு குடில். அங்கே நரதுவின் குடித்தனம். சற்று தொலைவில் ஒரு பெரிய ஏரி. யானை குளிக்கவும் களிக்கவுமான நீர்நிலை அது. அது போக ஒரு கரும்புக் காடு, யானை திரிவதற்கேற்ற சிறிய வனப் பகுதி, முறித்து விளையாட ஏதுவான மூங்கில் மரங்கள் நிறைந்த பிரதேசம் எல்லாம் இருந்தது. அந்த முகாமைச் சுற்றிச் சற்று சீரற்ற வட்டமாக எல்லைக் கோடு இட்டது போல் முள் வேலி.
நரதுவுக்கும் சந்தாவுக்கும் திருமணமாகிப் பத்தாண்டுகள் தீர்ந்தும் மகவு இல்லை. அது பற்றிய குறை அவர்கள் இருவர் மனதிலும் வடுவாக இருந்தது. அது யார் மீதான குறை என்ற வினாவுக்குள் போகாமல் சுமூகம் காக்க தாம்பத்ய உறவுதான் துணை நின்றது. இருவரும் பரஸ்பரம் பிய்த்துத் தின்று பின்னிக் கிடக்காத இரவுகள் அரிது. சில சமயம் பகல்களும் கூட கூசிக் கண் மூடிக் கொண்டன. திகட்டாத இன்பத்தில் திளைத்தார்கள். ஆனால் அவர்கள் என்ன செய்தும் சந்தாவின் வயிறு மட்டும் மௌனமாகவே இருந்தது.
மிகச் சில தினங்களில் யானையைக் கையாள நரதுவுக்கு உதவியாக இருக்க மின்சா அங்கே வந்து சேர்ந்தான். அவனுக்குப் பதின்மம் தீர்ந்து கொண்டிருந்தது; பதிலாக மீசை அடர ஆரம்பித்திருந்தது. மூன்று திங்கள்கள் முன் மின்சா முதலில் ரத்த நந்தகாவையும் பின் தம்மாவையும் ஒரே நாளில் பார்த்தான். இருவருமே தன் வாழ்வில் பெரும் மாற்றம் உண்டாக்கப் போகிறார்கள் என்பது முதல் பார்வையிலேயே புரிந்து விட்டது அவனுக்கு.
முதலில் தம்மா சிறுமி என்றே அவனுக்குத் தெரியவில்லை. பருவப் பெண்ணுக்குரிய அகலம் கொண்டிருந்தாள். பேசிப் பழக ஆரம்பித்த சில நாட்களில் விஷயம் புரிந்தது. ஒரு வகையில் மின்சா காத்திருந்தான். சொற்களில், செயல்களில் குழந்தையாகவும் குமரியாகவும் மாறி மாறி விளையாட்டுக்கள் காட்டிக் கொண்டே இருந்தாள் தம்மா.
ஆனால் தம்மா எந்த விகற்பமும் இல்லாமல் மின்சாவுடன் பழகினாள். அவளுக்கு அந்த வெள்ளை யானை மீது ஒரு கவர்ச்சி இருந்தது. ஆனால் நரது எவரையும் அதன் அருகே நெருங்க விடுவதில்லை. சந்தாவே அதனிடம் தள்ளித்தான் நிற்க வேண்டும். மின்சாவும் உடனிருந்து ஒத்தாசைகள் செய்யலாமே ஒழிய ரொம்ப நெருங்கச் சந்தர்ப்பம் இல்லை. அரச கட்டளையும் அதுவே. அது புனிதம். நரதுவே கூட அனாவசியமாக அதன் மீது ஏறக் கூடாது. அதன் மீது பொறுப்பு மட்டுமே அவனுக்கு இருந்தது; உரிமைகள் ஏதும் இல்லை.
தம்மா தனக்கும் ரத்த நந்தகாவுக்குமான பாலமாக மின்சாவைப் பார்த்தாள். அது போக, பாதுகாப்பு கருதி அந்த யானை முகாமிற்கு அருகே மற்ற குடியேற்றங்கள் ஏதுமில்லை. எனவே அத்தனித்த வனாந்திரத்தில் அவள் வயதொத்த ஒரே தோழனும் அவன் மட்டுமே.
தம்மாவுக்கு யானைகள் புதிதல்ல. நரது மட்டுமல்ல, அவளது தகப்பனாரும் காடுகளில் பிழைப்புப் பார்த்தவர்தான். ஆனால் அவள் அது வரை வெண் யானை என்ற ஒன்றைப் பார்த்ததே இல்லை. அதனால் ஆர்வமாக வந்தாள். அவள் முதலில் ரத்த நந்தகாவைப் பார்த்ததும் ஏமாற்றமே மிஞ்சியது. அவள் எதிர்பார்த்து வந்தது வெள்ளை வெளேரென வான் மேகப் பொதி போல் ஒரு பிரம்மாண்டத்தை. ஆனால் ரத்த நந்தகா அத்தனை வெள்ளையாக இல்லை. வழமையான யானையின் வெளிறிய வடிவமாகவே இருந்தது. சற்றே சிவப்பும் கொஞ்சம் பழுப்பும் புணர்ந்து உருவான வண்ணம் கொண்டிருந்தது. முழுக்க நீரில் நனைந்து எழுகையில் ஒருவிதமான இளஞ்செம்மை நிறத்தை எட்டியது.
ரத்த நந்தகாவின் உடலில் அவள் எதிர்பார்த்தது போல் மாசு மருவற்ற வெண் வண்ணம் தரித்திருந்தது அதன் வளைந்த, வலுத்த தந்தங்கள் மட்டுமே. ஒவ்வொரு முறை அந்தத் தந்தங்களைக் காணும் போதும் தம்மாவுக்கு உடலெங்கும் ஒருவிதப் பரவசம் பரவும். அவற்றை ஸ்பரிசித்துப் பார்க்கும் இச்சை எழும். ஆணுக்கு மீசை போல் ஆனைக்குத் தந்தம் என்று தம்மாவுக்குத் தோன்றும். அதற்குரிய கம்பீரத்தை அதுவே அளிக்கிறது.
ரத்த நந்தகா என்ற அதன் பெயரே முதலில் தம்மாவுக்கு வாயில் நுழையவில்லை. தம்மா, சந்தா என்ற எளிமையான பெயர்கள் வைத்தால் என்ன என நினைத்தாள். மின்சாதான் அவளுக்கு அதிலிருக்கும் அரசியல் சூட்சமங்களை விளக்கினான். பாலி பாஷையில் ரத்த நந்தகா என்பதன் பொருள் தேசப் பிரியம், முடிவற்ற மகிழ்ச்சி, செல்வச் செழிப்பு. தன் பெயருக்கும் அது போல் ஏதாவது ஓர் அர்த்தம் இருக்குமோ என்று யோசித்தாள் தம்மா.
மின்சாவிடம் கேட்ட போது “அனேகமாகப் பேரழகி என்பதாக இருக்கும்” என்று அவன் சொன்னான். அவள் சட்டெனத் திரும்பி அவனைப் பார்த்துக் கலகலவென சிரித்தாள்.
மின்சா அபினி நுகர்ந்தது போல் உற்சாகமாகி அவளை நெருங்கிப் புன்னகை ஈந்தான்.
*
அந்த முகாம் வந்ததில் இருந்தே ரத்த நந்தகா ஒரு விதப் பதற்றத்துடன்தான் இருந்தது. எவருடனும் இணக்கம் காட்டவில்லை. ஒருவித ஆக்ரோஷம் அதை ஆக்ரமித்திருந்தது.
புது நிலம், புது மனிதர்கள் என்ற சூழற்சிக்கல் காரணமாக இருக்கும் என நரது முதலில் நினைத்தான். ஓரிரு வாரத்தில் சரியாகி, இயல்பாகி விடும் என்றுதான் எதிர்பார்த்தான். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. அது அவனிடம் தன்னை ஒப்புக் கொடுக்கவே இல்லை. பெரிய பெருமூச்சுகள் அதனிடமிருந்து சதா வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. கண்கள் சிவந்தே காணப்பட்டன. அதன் கால்கள் எப்போதும் எதையேனும் மிதித்தெறிய வேண்டும் என்ற பசியுடன் இருப்பது போல் தென்பட்டது. எல்லோரும் அதை நெருங்கத் தயங்கினார்கள். யானைகளுடன் அத்தனை அனுபவம் கொண்ட நரதுவே எப்போதும் ஓர் அச்சத்துடனே அதனை அணுக வேண்டி இருந்தது. எல்லாவற்றுக்கும் உச்சமாக யானை அங்கே வந்த ஒரு மாதத்துக்குப் பின் அதைக் கண்டு அதன் நிலை பற்றிக் குறிப்பெழுதிப் போக வந்த இரு அரசுப் பிரதிநிதிகளை ஓட ஓடத் துரத்தித் தூக்கித் தூரமாக எறிந்தது. அதில் ஒருவனுக்கு இடுப்பெலும்பு உடைந்தது. மற்றவன் பயத்தில் சுவாதீனம் கெட்டான்.
பயின்னவுங் கவலைப்பட்டான். அவனுக்கு மஹா சக்கரபத் சரணடையும் போது வெண் யானை பர்மாவை அழிக்கும் என்று சொன்ன எச்சரிக்கை நினைவு வர, யாழ தேவியிடம் புலம்பினான். அவள் கொஞ்சமும் பதறாமல் அவனைப் பொறுமை காக்கச் சொன்னாள்.
“மனிதன் எப்படி மாற்றத்துக்கு மனமொப்ப மாட்டானோ அப்படியே குஞ்சரங்களும்!”
“நரனும் ஆனையும் ஒன்றா?”
“அரசே, யானை பல விஷயங்களில் மனிதனைப் போன்றதே. இன்னும் சொன்னால் சில பழங்குடிகளிடம் ஒரு கதை உண்டு - மனிதன்தான் யானையாக மாறி விட்டான் என.”
“அப்படியா!”
“ஆம். சிறு வயதில் நான் கேட்ட கதை. ஓர் ஊருக்கு ஒரு துறவி வந்தார். அங்கே வாழ்ந்த ஓர் ஏழை அவரிடம் போய் தான் பெரும் பணக்காரனாக வேண்டும் எனக் கோரினான். துறவி புன்னகையுடன் ஒரு களிம்பை அவனுக்குக் கொடுத்து அதை அவன் மனைவியின் கோரைப் பற்களில் தடவச் சொன்னார். அவனும் பெண்டாட்டியிடம் கெஞ்சிக் கூத்தாடி அதற்குச் சம்மதிக்க வைத்தான். சில தினங்களில் அவளது பற்கள் கையின் நீளத்துக்குப் பெரிதாக வளர்ந்தன. அவை தந்தங்களாகப் பளபளத்தன. மனைவியின் வலியைப் பொருட்படுத்தாமல் ஏழை அவற்றை வெட்டிக் கொண்டு போய் சந்தையில் விற்றான்.”
“ஐயய்யோ!”
“கேளுங்கள். பணம் கையில் நிறைந்தது. ஏழை அன்று இரவு வந்து மறுபடி மனைவியின் கோரைப் பற்களில் களிம்பு தடவினான். கண்ணீருடன் அவள் பொறுத்துக் கொண்டாள். ஆனால் இம்முறை தீர்மானித்து விட்டாள் - தந்தங்களை வெட்ட அனுமதிக்கக்கூடாது. வளர்ந்ததும் அவன் வெட்ட எத்தனிக்க, அவள் முரண்டு பிடித்து மறுக்க, அவர்களுக்குள் சண்டை வந்தது. கணவன் செய்வதறியாது திகைத்து நின்றான். கெஞ்ச ஆரம்பித்தான். அவள் இரங்கவே இல்லை. இறங்கி வரவே இல்லை. மெல்ல அவளது உடலும் பெரிதாக வளர்ந்தது. சில நாட்களில் அவள் ஒரு முழு யானையாகிப் போனாள். அந்த வீட்டையும் புருஷனையும் விட்டு காட்டுக்குப் போனாள். அங்கே குட்டிகள் ஈன்றாள். அதுதான் முதல் யானைச் சந்ததி. அப்படி மனுஷிதான் இப்பூமியில் யானை இனமாக மாறிப் போனாள்.”
“…”
“அதனால் பெண்ணின் அத்தனை அற்பத்தனங்களும் யானையிடம் இருக்கும். அதில் ஒன்றுதான் இந்த வெள்ளை யானையிடம் இருக்கும் காரணமற்ற முரட்டுப் பிடிவாதம். ஆனால் அதே சமயம் பெண்ணின் அத்தனை தாய்மையும் அருளும் யானையிடம் குடி கொண்டிருக்கும். பொறுமையாக இருங்கள். சரியாகும். எல்லா இரவும் விடிந்தே தீரும்.”
பயின்னவுங் அதை அப்படியே விட்டு விடத் தீர்மானித்தான். நரது அதன் பராமரிப்புக்குத் தேவையானதை அரசாங்கத்திடம் விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம். மாதம் ஒரு முறை நரது அது பற்றி அரசுக்கு அறிக்கை தர வேண்டும். அரசு எவ்வகையிலும் ரத்த நந்தகாவைத் தொந்தரவு புரியாது. அப்படித்தான் மாதங்கள் சில ஓடிப் போயிருந்தன.
மின்சா நரதுவுக்கு உதவியாளனாக வந்து சேர்ந்தது அந்தச் சலுகையில்தான். அவனுக்கு யானைக்குப் பக்குவமாகக் கவளம் உருட்டவும், அதன் லத்தியை அள்ளித் தள்ளவும், அதன் பெருவுடலைக் குளிப்பாட்டிச் சுத்திகரிக்கவுமான கடமைகள் அளிக்கப்பட்டன.
மின்சா நரதுவின் பணியைப் பாதி ஆக்கினான். ஆனால் அவனுக்கு முக்கியச் சவாலாக இருந்தது ரத்த நந்தகாவைச் சமாதானப்படுத்த, சாந்தப்படுத்த இயலவில்லை என்பதே.
நரது தனக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் அதனிடம் பிரயோகித்துப் பார்த்தான். தோல் கருவிகளை வைத்து ஓசை எழுப்பி இரவுகளில் அதனைத் தூங்க விடாமல் செய்து பார்த்தான். உறக்கமின்மை அதனைப் பலவீனமாக்கி இறுதியில் அடி பணியச் செய்யும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் அது இரவில் விழித்திருந்து விட்டு பகலில் நன்றாக உறங்க ஆரம்பித்தது. அதற்குத் தரும் கவளங்களின் ருசியைக் குறைத்தான், அடுத்து அளவைக் குறைத்துப் பார்த்தான். அதன் நடமாட்டம் முடக்க, பெரும்பாலான நேரம் சங்கிலியால் பிணைத்தே வைத்துப் பார்த்தான். ஆனால் எதற்கும் ரத்த நந்தகா மசியவே இல்லை.
அடுத்து நரது தன் அங்குசத்துக்குப் பழகிய மற்ற யானைகள் வைத்து அதனை மிரட்டப் பார்த்தான். ஆனால் ரத்த நந்தகாவை விட அளவில் பெரிய யானைகளும் கூட அதன் மூர்க்கத்துக்கு அஞ்சிப் பின்வாங்கின. இறுதி முயற்சியாக ஒரு பெண் யானையை ரத்த நந்தகாவிடம் அழைத்து வந்தான். இரண்டும் நெருங்கி பரஸ்பரம் மோப்பம் பிடித்துக் கொண்டு உரசின. சட்டென ரத்த நந்தகா அந்தப் பெண் யானையை தனது தந்தத்தை வைத்து இடித்துத் தள்ள, அது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தெறித்தோடியது.
அதற்கு மென்மையாக மதம் பிடித்திருக்கிறதோ என்று கூட அவனுக்குத் தோன்றியது.
வெண்களிறுகளை எவ்வகையிலும் உடலளவில் துன்புறுத்தக்கூடாது என்பது பர்மிய அரசின் சட்டம். அது ராஜதுரோகத்துக்கு இணையாகக் கருதப்படும். பாகன் அங்குசம் வைத்துக் கொள்வது கூட யானையை மிரட்ட மட்டுமே; குத்திக் காயப்படுத்தக் கூடாது. மீறியவர்களுக்குக் கடும் தண்டனை உண்டு. வெள்ளை யானைகள் குறைவு என்பதால் இதெல்லாம் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. பொதுவாகப் பாகன்கள் வெள்ளை யானையைப் பராமரிக்க முன்வருவதில்லை. அதனால் இவ்வேலைக்கு வருவோருக்குப் பெருஞ்சம்பளமும் நல்ல வசதிகளும் செய்து தருவது வழக்கம். நரது அது நாள் வரை வெண்களிறுகளைப் பார்த்துக் கொண்டவன் அல்லன். ஆனால் இம்முறை வசதிகளின் பொருட்டு முயற்சி செய்து பார்க்க எண்ணி, அரசு கேட்ட போது ஒப்புக் கொண்டான்.
மின்சாவுக்கு சிறந்த யானைப் பாகனாக வேண்டும் என்பதுதான் வாழ்நாள் லட்சியம். அவனுக்கு யானையை நெருங்கிக் கையாள, குறிப்பாக அதன் மீதேறிச் சவாரி செய்ய ஆர்வமும் தைரியமும் இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவே இல்லை. நரது கண்டிப்பானவன் என்பது முக்கியக் காரணம். ஒரு முறை மின்சா யானைக்குக் குளியல் காட்டிக் கொண்டிருந்த போது சற்று நேரம் அதன் முதுகிலேறி அமர்ந்ததை நரது பார்த்து அவனை அறைந்து விட்டான், அதுவும் தம்மா முன்பாக. அவள் அவன் மீது பரிதாபப்பட, அவன் தடுமாறி யானைச் சாணி அள்ளும் கூடை மீது விழுந்தது கண்டு சந்தா மெல்லச் சிரித்தது போலிருந்தது. சந்தா சிரித்ததை விட தம்மாவின் பரிதாபம் அதிகம் வலித்தது. அதிலிருந்து அவன் தனது கடமைகளைத் தாண்டி ரத்த நந்தகாவைத் தீண்டுவதில்லை.
அப்படி அவன் கட்டுப்பாடு காத்திருந்த போதுதான் தம்மா வந்து மின்சாவிடம் கேட்டாள் - ரத்த நந்தகாவின் முதுகிலேறிச் சவாரி போக வேண்டும் என. மின்சாவை ஒரு பக்கம் தயக்கம் உந்த, தம்மாவின் கெஞ்சல் முகமும், அவனது காதல் மனமும் அதை உதாசீனம் செய்தது. உடனே உற்சாகமாக ஒப்புக் கொண்டான். மின்சாவின் தயக்கத்துக்கு நரது மட்டும் காரணமல்ல; ரத்த நந்தகா பிளிறிக் காட்டிக் கொடுத்து விட்டாலோ, வெறியேறி ஏதும் அசம்பாவிதச் செயல்கள் நடத்தி விட்டாலோ என்ற கவலையும்தான். ஆனால் தன்னை நம்பிக் கேட்டவளிடம் தன் வீரம் நிரூபிக்க நல்ல சந்தர்ப்பம் அது. தம்மாவின் மனதில் நெருக்கமாக, அழுத்தமாக இடம் பெற அழகான வாய்ப்பு. எனவே மின்சா தவற விட விரும்பவில்லை. நரது இரவில் கள் அருந்தும் நாள் அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நரதுவின் கள்ளும் கலவியும் முடிந்து தேகம் சாய்த்துக் கண்ணயர்ந்து குறட்டை விட்ட பிறகு தம்மா சற்றும் சப்தம் எழுப்பாமல் மெல்ல எழுந்து குடிலின் கதவின் தாழ் நீக்கித் திறந்து, சற்று தூரத்தில் இருக்கும் யானைக் கொட்டடிக்கு வந்து விட வேண்டும். அங்கே மின்சா அவளுக்காக உறங்காமல் காத்திருப்பான். பின் யானையை எழுப்பி அதன் மீது இருவரும் சிறிது தூரம் சவாரி செய்து விட்டுத் திரும்புவதுதான் திட்டம். பின் அவள் வந்த வழியே மறுபடி குடிலுக்குப் போய்ப் படுத்துக் கொண்டு விடுவது. எளிமையான ஏற்பாடு.
அப்படித்தான் அந்த இரவில் தம்மா சிறுமியாக யானை மீதேறி குமரியாக இறங்கினாள்!
மறுநாள் தம்மா ருதுவடைந்த செய்தி முகாமில் அறிவிக்கப்பட்டது. அது அவர்கள் மரபு.
வயதடைந்த பெண்ணை எல்லோரும் பொறுப்புடன் அணுக வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. ஆடவர்கள் அந்தப் பெண்ணை அதன் பிறகு தொடத் தடை, உற்றுப் பார்க்கக் கூடாது, உறுத்தலாகப் பேசலாகாது. ஓரிரு நாளில் குறைந்த அளவிலான உறவினர்கள் அந்த முகாமுக்கு வரவழைக்கப்பட்டு பூப்படைதல் சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைவேற்றப்பட்டன. அதன் ஒரு பகுதியாக தம்மா சிறுமிக்கான உடைகளை விடுத்து பெண்ணின் உடைகளைத் தரித்தாள். விதவிதமான இனிப்புப் பண்டங்கள் அவளுக்கு வழங்கப்பட்டன. மாதா மாதம் வயதுக்கு வந்தால் நன்றாக இருக்குமே என அவளுக்குத் தோன்றியது. இளம் பெண்கள் அவளைச் சூழந்து கொண்டு ஆபாசக் கேலி செய்தனர். அவர்களை விரட்டி விட்டு சில கிழவிகள் அவளது காதோடு காதாக அறிவுரைகளும் எச்சரிக்கைகளும் சொன்னார்கள். மின்சா பார்த்த அளவில் தம்மா முதன் முறையாக வெட்கப்பட்டாள். அவனுக்குத் தடை நீங்கித் தன் பாதை தெளிந்தாற் போலிருந்தது.
தம்மா யோசித்தாள். அவள் உடல் இளகிப் பிளந்த போது அவளை ஸ்பரிசித்திருந்தது இரு ஆண்கள். ஒன்று ரத்த நந்தகா, மற்றது மின்சா. மின்சாவைப் புதிதாகப் பார்த்தாள். அழகன்தான். தன் அக்காள் கணவனை விடவும் மென்மையானவன், தன்மையானவன். அக்குளிர் பிடித்த இரவில் யானையில் அவளை ஏற்றிப் பின் தான் ஏறி அவளது இடை சுற்றிக் கரம் போட்டுப் பாதுகாப்பாக அணைத்துக் கொண்ட மின்சாவின் லாகவம் நினைவில் வந்தது. வாழ்நாள் முழுக்க அந்தக் கையின் அணைப்பிற்குள் இருப்பது சொகுசுதான். அப்படி எண்ணிய போது என்ன நினைப்பு இது என்று அச்சப்பட்டாள்.
ஆனால் அவனை நினைக்கச் சுகமாக இருந்தது. பெரியவளான பின் சந்தா அவளுக்கு நிறையக் கட்டுப்பாடுகள் விதித்தாள். எனவே மின்சாவைப் பார்க்கவும் பேசவும் தம்மா உறுத்தாத காரணங்களை உண்டாக்கிக் கொண்டாள். அவனை நிறைய கவனித்தாள்.
சரியாகச் செதுக்கப்படாத மீசை அவன் முகத்தை மேலும் ஈர்ப்புக்குரியதாக்குவதாகத் தோன்றியது. அவன் ஒருமுறை அவளது பெயரின் பொருள் ‘பேரழகி’ என்று சொன்னதை எண்ணி எண்ணி நாணம் கொண்டாள். எனில் அவனுக்கும் தன் மீது சாய்வு இருக்கிறது எனக் கணித்தாள். ஆனால் அவனே தன் விருப்பம் சொல்லட்டும் எனக் காத்திருந்தாள்.
அதன் பின் தம்மாவும் மின்சாவும் அவ்வப்போது இரவுகளில் திருட்டுத்தனமாக யானை மீது உலாப் போக ஆரம்பித்தனர். மின்சாவின் தீண்டலில் மெல்லிய மீறல்கள் இருந்தன என்பதை தம்மா உணர்ந்து தனக்குள் புன்னகை செய்து கொண்டாள். அவளது ஒப்புதல் மின்சாவை மேலும் உற்சாகம் ஆக்கி முன்னேற உந்தியது. தம்மா பருவமடைந்ததில் இருந்து சரியாக ஒரு திங்கள் கழிந்து ஒரு பௌர்ணமி நாளில் ரத்த நந்தகாவின் மீது இருவரும் அமர்ந்திருந்த தருணத்தில் பின்னிருந்து அவளது கழுத்தோரம் முத்தமிட்டு மின்சா தன் காதலை வெளிப்படுத்தினான். அவள் கிறங்கி, “ம்ம்ம்” என்ற இழுவையில் சம்மதம் சொன்னாள். பூரணை பால் பொழிய, வெண்வாரணம் உற்சாகமாக நடந்தது.
பெண்மை திறந்து பருவத்துக்கு வந்ததுமே கள்ளத்தனம் பெண்ணுக்குள்ளே நுழைந்து விடுகிறது. உடன் காதலும் சேர்ந்து விட்டால் கள்ளம் இரட்டை மடங்காகி விடுகிறது. பின் தம்மா நிறைய மறைத்தாள், மழுப்பினாள், மெய் திரித்தாள், பொய் சொன்னாள். அவளே வியக்கும் வண்ணம் நரதுவுக்கும் சந்தாவுக்கும் அவள் மீது ஒரு சந்தேகமும் எழவில்லை.
சந்தா நரதுவிடம் சொன்னாள் - தங்கை வயதுக்கு வந்து விட்டதால் இனி ராத்திரிகளில் சற்று கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என. அவன் அதைப் பெரிதாக லட்சியம் செய்யவில்லை. அந்தக் குடில் மிக எளிமையான கட்டமைப்பு கொண்டிருந்தது. வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய அறை. இடப்புறம் சமையல் கூடம், வலப்புறம் ஒரு சிறிய அறை. அந்தப் பெரிய அறையில் சந்தாவும் நரதுவும் படுத்துக் கொள்கிறார்கள். வலப்புறச் சிறிய அறையில் தம்மா படுத்துக் கொள்கிறாள். சிறிய அறைக்குக் கதவு உண்டு என்றாலும் பெரிய அறையின் சப்தங்கள் அங்கு எட்டுவதைத் தவிர்க்க முடியாது. எனவே சந்தாவுக்கு சமீப நாட்களில் ஒரு சங்கடம் புகுந்திருந்தது.
தம்மா மாதாந்திர சுழற்சிகளில் சுகாதாரமாகப் புழங்குவதைக் கற்றுக் கொண்டாள். தன் உடலின் மாற்றங்களைக் கவனித்தாள். மார்பும், இடையும், புட்டமும், தொடையும் ஒரு மாதிரி சிற்பம் போல் வடிவெடுப்பதை உணந்தாள். தன் பொன்னுடலில் சுகத்தின் ஒரு பெரும் பொக்கிஷம் பல்வேறு புள்ளிகளில் ஒளிந்திருப்பதைக் கணிக்க முடிந்தது.
வழி தெரிந்து விட்டாலும் தம்மா சுயஇன்பம் செய்யவில்லை. அந்த இன்பத்தை முதலில் மின்சாவிடம் நேரடியாகவே அடைய வேண்டும். கண் மூடிய கற்பனையாக வேண்டாம். போக, தன்னை மு
Published on December 03, 2023 04:50
No comments have been added yet.
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
